கே.ஆர்.நாராயணன் என்னும் தொலைநோக்குப் பார்வையாளர்

Viduthalai
1 Min Read

அரசியல்

இந்திய பிரதமர் மோடிக்கு மிகவும் நெருங்கிய முக்கிய நபர் “நமது அரசமைப்புச் சட்டத்தை மாற்றி அமைக்க வேண்டிய காலம் வந்து விட்டது, உலக நாடுகள் எல்லாம் காலத்திற்கு ஏற்ப அரசமைப்புச் சட்டத்தை மாற்றி வருகின்றன என்று கூறியிருக்கிறார். 

குடியரசுத் தலைவராக இருந்தபோது கே.ஆர்.நாராயணன் அவர்கள் 2000ஆம் ஆண்டு நாடாளுமன்ற கூட்டு அவையில் அன்றே பதில் கூறி உள்ளார். 

“எதிர்காலத்தில் நமது அரசமைப்புச் சட்டத்தை மாற்றும் பேச்சுக்கள் எழலாம், திருத்தி அமைக்கும் பேச்சும் எழலாம். ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளவேண்டும். நாம் இவ்வளவு தூரம் வந்துள்ளோம் என்றால் அது நமது அரசமைப்புச்சட்டத்தின் காரணமாகத்தான். நமது வெற்றிகள் அனைத்தும் அரசமைப்புச் சட்டத்தின் அச்சாணியில் இருந்துதான் துவங்குகிறது. 

அதை மாற்ற நினைப்பது அச்சாணியை அகற்ற நினைப்பது போன்றது” என்று கூறியிருந்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *