கே.ஆர்.நாராயணன் என்னும் தொலைநோக்குப் பார்வையாளர்

1 Min Read

அரசியல்

இந்திய பிரதமர் மோடிக்கு மிகவும் நெருங்கிய முக்கிய நபர் “நமது அரசமைப்புச் சட்டத்தை மாற்றி அமைக்க வேண்டிய காலம் வந்து விட்டது, உலக நாடுகள் எல்லாம் காலத்திற்கு ஏற்ப அரசமைப்புச் சட்டத்தை மாற்றி வருகின்றன என்று கூறியிருக்கிறார். 

குடியரசுத் தலைவராக இருந்தபோது கே.ஆர்.நாராயணன் அவர்கள் 2000ஆம் ஆண்டு நாடாளுமன்ற கூட்டு அவையில் அன்றே பதில் கூறி உள்ளார். 

“எதிர்காலத்தில் நமது அரசமைப்புச் சட்டத்தை மாற்றும் பேச்சுக்கள் எழலாம், திருத்தி அமைக்கும் பேச்சும் எழலாம். ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளவேண்டும். நாம் இவ்வளவு தூரம் வந்துள்ளோம் என்றால் அது நமது அரசமைப்புச்சட்டத்தின் காரணமாகத்தான். நமது வெற்றிகள் அனைத்தும் அரசமைப்புச் சட்டத்தின் அச்சாணியில் இருந்துதான் துவங்குகிறது. 

அதை மாற்ற நினைப்பது அச்சாணியை அகற்ற நினைப்பது போன்றது” என்று கூறியிருந்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *