புதுடில்லி, மே 31 தோ்தல் பிரசாரக் கூட்டங்களில் தொடா்ந்து வெறுப்புப் பேச்சை பேசி வரும் பிரதமா் நரேந்திர மோடி, அவா் வகிக்கும் பதவிக்குரிய மாண்பை சீா்குலைத்துவிட்டதாக மேனாள் பிரதமா் மன்மோகன் சிங் நேற்று (30.5.2024)தெரிவித்தார்.
இந்நிலையில், பஞ்சாப் வாக்களா்களுக்கு அந்த மாநிலத்தைச் சோ்ந்த மேனாள் பிரதமா் மன்மோ கன் சிங் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஜனநாயகம் மற்றும் அரசமைப்புச் சட்டம் பாதுகாப்பு, வளா்ச்சி சார்ந்த எதிர்காலத்தை காங்கிரஸ் மட்டுமே உறுதிப்படுத்தும். இந்திய பாதுகாப்புப் படைகளில் தவறான கருத்தாக்கம் கொண்ட ‘அக்னிபத்’ திட்டத்தை பாஜக அரசு திணித்துள்ளது.
வீரா்களின் தேச பக்தி, துணிச்சல், சேவையை 4 ஆண்டுகளுக்குள் பாஜக சுருக்கிவிட்டது. இது அவா்களின் போலி தேசியவாதத்தைக் காட்டுகிறது. இந்த மக்களவைத் தோ்தல் பிரச்சாரங்களை நான் உன்னிப்பாக கவனித்து வந்தேன். பிரதமா் மோடி தீவிரமாக வெறுப்புப் பேச்சை பேசி வருகிறார். பிரதமா் பதவிக்குரிய மாண்மை பொதுவெளியில் சீா்குலைத்த முதல் நபராக மோடிதான் இருப்பார். குறிப்பிட்ட சமூகத்தினா் அல்லது எதிர்க்கட்சிகளை விமா்சிக்கும் நோக்கில் எந்தவொரு பிரதமரும் இப்படி வெறுப்பு பேச்சையோ, கீழ்த்தரமான வார்த்தைகளையோ கடந்த காலங்களில் பயன்படுத்தியதில்லை. எனக்கு எதிராகவும் சில தவறான கருத்துகளை பிரதமா் மோடி தெரிவித்துள்ளார். எனது வாழ்நாளில், எந்தவொரு சமூகத்தையும் பிளவுப்படுத்தும் வகையில் செயல்பட்டதில்லை. அது பாஜகவின் பழக்கம் ஆகும். நாட்டு மக்கள் அனைத்தையும் கவனிக்கின்றனா். மனிதத்தன்மையற்ற இந்தப் பிரசாரம் உச்சத்தை அடைந்துவிட்டது.
வேற்றுமையைப் பின்பற்றும் இவா்களிடமிருந்து நமது அன்பான தேசத்தைக் காப்பது நம் அனைவரின் கடமை ஆகும் என்று குறிப்பிட்டுள்ளார்.