31.5.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* பிரதமர் மோடி கன்னியாகுமரியில் தியானம் மேற் கொண்டு, ஊடகங்கள் வழியாக பரப்புரை மேற்கொள்வது தேர்தல் விதிமுறைகளுக்கு முரணானது, மம்தா குற்றச் சாட்டு.
* மோடியின் வெறுப்பு பேச்சுக்கள் பிரதமர் பதவிக்கே இழுக்கு. தரம் தாழ்ந்த, கண்ணியம் குறைந்த பேச்சால் பிரதமர் பதவியின் மாண்பை குறைத்த முதல் பிரதமர், மோடி ஆவார். மேனாள் பிரதமர் மன்மோகன் சிங் கடும் தாக்கு
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* உ.பி.யில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக தேசிய அளவில் பெறுவதற்குப் பார்க்கும்போது, இந்தியா-கூட்டணி பாஜகவை 50-க்கும் குறைவாக குறைத்து விட்டதாக கூறுகிறது. எந்த அலையும் இல்லை, கோபமும் இல்லை: இது உ.பி.யில் என்.டி.ஏ மற்றும் இந்தியாவுக்கு இரு வழிகளிலும் வேலை செய்யக்கூடும் என்கிறார் கட்டுரையாளர் ரத்தன் மனி லால்.
தி இந்து:
* விவசாயிகளுக்கு எதிரான மோடி அரசை வீழ்த்த வாக்காளர்களுக்கு விவசாய அமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா வேண்டுகோள்.
* நாட்டிற்கான புதிய தொலைநோக்கு பார்வையை காங்கிரஸ் மக்கள் முன் வைத்துள்ளது. நாட்டின் அரசியலமைப்பு மற்றும் அமைப்புகளை “காக்க” தலை வணங்காமல் நின்ற எதிர்க்கட்சி கூட்டணியின் அனைத்து தலைவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு ராகுல் காந்தி வீடியோ செய்தியில் நன்றி தெரிவித்தார்.
– குடந்தை கருணா
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
Leave a Comment