கல்லூரி மாணவர்களுக்கு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா பேச்சுப்போட்டி

1 Min Read

சுயமரியாதை இயக்க நூற்றூண்டு விழா பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம், குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக எம்.இ.டி கல்வி நிறுவனம் ஒருங்கிணைப்பில் கல்லூரி மாணவர்களுக்கான மாபெரும் பேச்சு போட்டி குமரிமாவட்டம் செண்பக ராமன்புதூரில் எம்.இ.டி. பொறியியல் கல்லூ ரியில் வைத்து “பெரியாரும் பெண்ணுரிமை யும், பெரியார் ஒரு தொலைநோக்காளர் பெரியார் அறிவியல் பார்வையும் அணுகு முறையும் ஆகிய தலைப்புகளில் நடத்தப்பட் டது. கல்லூரி செயல் அதிகாரி கோ.மகா தேவன் தலைமை தாங்கினார். பகுத்தறிவா ளர் கழக மாவட்டத் தலைவர் உ.சிவதாணு, கழக மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிர மணியம்; கழக காப்பாளர் ஞா.பிரான்சிஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
குமரி மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றிவேந்தன் தொடக்கவுரையாற்றினார். கல்லூரி முதல்வர்எழில் தினேகா கல்வியியல் கல்லூரி முதல்வர் சிறீலதா ஆகியோர் போட்டியினை ஒருங்கிணைத்தனர். 170க்கும் அதிகமான மாணவ, மாணவியர்கள் இந்த பேச்சுப்போட்டியில் பங்கேற்று பெரியாரு டைய வரலாறு குறித்து பேசினர். இலக்கிய அணி செயலாளர் பா. பொன்னுராசன் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *