காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ‘பெண் விடுதலை’ கருத்தரங்கம்

Viduthalai
1 Min Read

காஞ்சிபுரம்,செப்.2- காஞ்சிபுரம் – வையாவூர் சாலை எச். எஸ் அவென்யூ பூங்காவில் 20.8.2023 அன்று மாலை 5.30 மணி அளவில்,  காஞ்சி தமிழ் மன்றத்தின் அய்ந்தாவது நிகழ்ச்சி ‘விடுதலை’ என்ற தலைப்பில் நடைபெற்றது. 

ர.உஷா அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு பேராசிரியர் முனைவர் பா. அரிஸ் டாட்டில் தலைமை வகித்தார். 

அ. வெ. முரளி, தே. நாகராஜன், ஷகிலா, எ. கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

காஞ்சி தமிழ் மன்றத்தின் அமைப்பாளர் முனைவர் பா. கதிரவன் கூட்டத் தலைப்பு குறித்து தொடக்க உரையாற்றினார்.

‘பெண் விடுதலை’ என்ற தலைப்பில் துணை வட்டாட்சியர் இரா. மணிமேகலை பல்வேறு சுவையான செய்திகளை எடுத்துக்காட்டி உரை யாற்றினார்.  

‘மொழி விடுதலை’ என்ற தலைப்பில் குறள் அமிழ்தன் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பலசெய்திகளை எடுத்துக் கூறினார். 

‘மண் விடுதலை’ என்ற தலைப்பில் கவிஞர் அமுதகீதன் தமிழ்நாட்டு வரலாற்றுச் செய்தி களையும் பெரியார், ‘தமிழ் நாடு தமிழருக்கே’ என்று முழங்கியதையும் எடுத்துக்காட்டி உரை யாற்றினார். 

புகழேந்தி, பேராசிரியர் முனைவர் பா. அரிஸ் டாட்டில், சிறீராம் சப்ளையர்ஸ் கே. டில்லி, 

தே. நாகராஜன் ஆகியோர் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உதவி செய்தனர். 

நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் கவிஞர் மு. தேவேந்திரன் நன்றி கூறினார். அனை வருக்கும் இயக்க நூல்கள் பரிசாக வழங்கப்பட்டன. 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *