தமிழில் பெயர்ப் பலகை வைக்காவிட்டால் ரூபாய் 2000 அபராதம்

Viduthalai
1 Min Read

அரசு, தமிழ்நாடு


சென்னை, செப். 2
– வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர்ப் பலகை வைக்கா விட்டால் இனி 2000 ரூபாய் அபராதம் விதிக்கும் வகையில் அரசாணை வெளியிட உள்ளதாக தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளது.

தமிழில் பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கடந்த பிப்ரவரி மாதம் விசார ணைக்கு வந்தது. அப்போது, தமிழில் பெயர்ப் பலகை வைக்காத தற்காக 50 ரூபாய் அபராதமாக வசூலிக் கப்படு கிறது என்றும் அபராத தொகையை உயர்த்தி வசூலிக்கும் திட்டம் அரசின் ஒப்புதலுக்காக உள்ளது எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து நீதிபதிகள், அபரா தத்தை உயர்த்தி வசூலிக்கவும், தொடர்ந்து தமிழில் பெயர் பலகையை மாற்றாதவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்கவும் உத்தர விட்டனர்.

இந்நிலையில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால் இனி 2000 ரூபாய் அபராதம் விதிக்க அரசு திட்டமிட்டுள் ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தமிழில் பெயர் பலகை வைக்காத எத்தனை நிறுவனங் கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது என விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *