மேற்கு வங்க வாக்காளர்களின் வாக்குகளை ஈர்ப்பதே மோடியின் தியானம்

Viduthalai
1 Min Read

நாகர்கோவில், மே 30 கடைசிக் கட்ட வாக்குப் பதிவு நடக்கும் நாளன்று (1.6.2024) விவேகானந்தர் பாறை மீது மோடி தியானம் செய்யும் காட்சிஅனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாகும்

முக்கியமாக மேற்குவங்கத்தில் உள்ள அனைத்து நாளிதழ்களும் இதர செய்தி நிறுவனங்களும் நேரலையில் ஒளிபரப்ப உத்தரவு –இது ஒரு தேர்தல் பிரச்சார உத்தி –

தமிழ் நாட்டின் கன்னியாகுமரி பாதுகாப்புக் கெடுபிடிகளால் பொதுமக்களின் நடமாட்டங்கள், வணிக நிறுவனங்கள், போக்குவரத்து என அனைத்தும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. கோடை விடுமுறையைக் கொண்டாட அதிகமான மக்கள் ஒன்றுகூடும் இடம் அது. ஆனால் ஈ, காக்கைகூட நடமாட விடாததால் வெறிச்சோடி விட்டது. மேற்கு வங்கத்தில் முந்தைய தேர்தலை விட இந்த தேர்தலில் சில இடங்கள் அதிகம் வாங்க மேற்கு வங்க மக்களை முட்டாளாக்க விவேகானந்தர் வேடம் போட்டு விவேகானந்தர் பாறையில் தியானம் செய்யவிருக்கிறாராம். மோடி தியானம் செய்வதற்காகவே அவருக்கு என பல லட்சம் ரூபாய் செலவில் திடீரென குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. இது சமூகவலைதளத்திலும் பதிவாகி உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *