20.6.1964 “விடுதலை” தலையங்கத்தில் நமது தலைவர் ஆசிரியர் அவர்கள் ஒரு தகவலைக் குறிப்பிட்டுள்ளார்.
“செயங்கொண்டம் பஞ்சாயத்து யூனியனில் உள்ள 32 பஞ்சாயத்துகளுக்கும், கல்வி நிலையங்களுக்கும் “விடுதலை”யைத் தருவிக்கும் தீர்மானம் ஜெயங்கொண்டம் வட்டார கழகத் தலைவரும், தேவாமங்கலம் பஞ்சாயத்துத் தலைவருமான திரு.சுந்தரமூர்த்தி அவர்களின் சீரிய முயற்சியினால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் மற்ற பஞ்சாயத்து யூனியன்களுக்கும் வழிகாட்டிய பெருமையை, அப்பஞ்சாயத்து யூனியனும், அம்முயற்சிக்குக் காரணமாக இருந்த மு்ககிய தோழர்களும் அமைகின்றனர்.
இதுபோல பல ஊர்களிலும் உள்ள தோழர்கள் கொஞ்ச நேரத்தை இதற்கு ஒதுக்கினால்கூட அதிசயிக்கத்தக்க வண்ணம் சாதனைகளைப் புரிந்துகாட்ட முடியும்!’’
இது ஓர் எடுத்துக்காட்டுக்காகவே! ஊராட்சி, நகராட்சிகளில் பெரும்பாலும் திராவிட இயக்கத் தோழர்களே பொறுப்பில் இருக்கிறார்கள். 60 ஆண்டுகளுக்கு முன்பே முடியும் என்றால், இப்பொழுது முடியாதா? முயலுங்கள் தோழர்களே!
– கலி.பூங்குன்றன்,
துணைத் தலைவர், திராவிடர் கழகம்