சென்னை விமான நிலையத்தில் குப்பையில் ஆதார், பான் அட்டைகள்

2 Min Read

அரசியல்


சென்னை,செப்.2
– சென்னை விமான நிலையத்தில் புதிய பன்னாட்டு ஒருங்கிணைந்த விமான முனையத்தின் வருகை பகுதி,ஆறாவது வாசல் அருகே, குப்பைத் தொட்டி இருக்கும் இடத்தில், நேற்று (1.9.2023) காலை குவியல், குவியலாக ஆதார் கார்டுகள் மற்றும் பான் கார்டுகள், மற்றும் அடையாள அட்டைகள் போன்றவைகள் மொத்தமாக கொட்டப்பட்டு கிடந்தன. இதைப் பார்த்து அங்கிருந்த விமானப் பயணிகள், பயணிகளை வரவேற்று அழைத்துச் செல்ல வந்திருந்த பொதுமக்கள் ஆகியோருக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. இதை அடுத்து சிலர் அந்த ஆதார், பான் கார்டுகளை ஆர்வத்துடன் எடுத்துப் பார்த்தனர். உடனே அங்கு பாதுகாப்புக்கு நின்ற மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள், அவர்கள் தடுத்தனர். மேலும் இவைகளை விமான நிலைய ஊழியர்கள் தான் வந்து கொட்டி இருக்கின்றனர். அவர்கள் வந்து அள்ளி சென்று விடுவார்கள் என்று கூறினர்.

இது குறித்து பேசிய சென்னை விமான நிலைய அதிகாரிகள், “சென்னை விமான நிலையத்தில் பயணம் செய்ய வரும் பயணிகளுக்கு ஆதார் கார்டுகள், பான் கார்டுகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை. எனவே பயணிகள் கொண்டு வரும் ஆதார் கார்டுகளை, சிலர் தவறுதலாக விட்டு செல்கின்றனர். சில பயணிகள் கைகளில் இருந்து தவறி கீழே விழுந்து விடுகின்றன. இதைப்போல் கேட்பாரற்று விமான நிலையத்திற்குள் கிடக்கும், கார்டுகளை விமான நிலைய ஊழியர்கள் எடுத்து வந்து, விமான நிலைய மேலாளர் அறையில் ஒப்படைப்பார்கள்.

அங்கு குறிப்பிட்ட காலத்திற்கு வைக்கப்பட்டிருக்கும். கார்டுகளை தவறவிட்டவர்கள் வந்து, பெற்று செல்வார்கள். ஆனால் நீண்ட காலமாக யாரும் வராமல் தேங்கி கிடக்கும், கார்டுகளை இதைப்போல் குப்பைகளோடு சேர்த்து விடுகிறோம்.இந்த கார்டுகளை முன்பு அஞ்சல் துறை மூலம், கார்டுகளில் உள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கும் பணிகள் நடந்தன. ஆனால் தற்போது கார்டுகளை தவறவிட்டவர்கள், இணையதளம் மூலமாக, புதிய ஆதார் கார்டுகள் டவுன்லோட் செய்து கொள்கின்றனர். எனவே கார்டுகளை தவற விட்டவர்கள் மீண்டும் வந்து, கார்டுகளை கேட்பதும் இல்லை.

அதைப்போல் அஞ்சல் துறையும் முன்பு போல், இந்த கார்டுகளை திருப்பி அனுப்புவதில் ஆர்வம் காட்டுவது இல்லை. எனவேதான் வேறு வழி இல்லாமல், இதைப்போல் குப்பையில் போட வேண்டிய நிலை ஏற்படுகிறது” என்று கூறியுள்ளனர். 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *