11. “தண்டளிர்ப்பதம்” இச்சொல்லை சரியாக பிரித்திடும் முறையை தேர்வு செய்:
A) தண் + அளிற் + பதம்
B) தன்மை + தளிர் + பதம்
C) தண்மை + தளிர் + பதம்
D) தண்டளிர் + பதம்
12. கண்டெடுக்கப்பட்டுள்ளன – பிரித்து எழுதுக:
A) கண்டு + எடுக்கப்பட்டு + உள்ளன
B) கண்டு + எடுக்கப் + பட்டுள்ளன
C) கண்டெடுக்க + பட்டு + உள்ளன
D) கண் + டெடுக்க + பட்டு + உள்ளன
13. பாகற்காய் – பிரித்தெழுதுக
A) பாகு + அல் + காய்
B) பாகு + அற்காய்
C) பாகற் + காய்
D) பாகு + கல் + காய்
14. தவறான இணை காண்க(பிரித்து எழுதுக)
A) கலம்பகம் = கலம் + அகம்
B) பைந்நிணம் = பசுமை + நிணம்
C) நன்கணியர் = நன்கு + அணியர்
D) தொண்ணூற்றாறு = தொண்ணூறு + ஆறு.
15. “அங்கை” சரியாக பிரிக்கும் முறையை காண்க:
A) அங் + கை
B) அகம் + கை
C) அ+ங்+கை
D) அகம்+க்+ஐ
16. சரியானதை காண்க (பிரித்து எழுதுக)
A) நாத்தொலைவில்லை = நா + தொலைவு + வில்லை
B) பொருட்டன்று = பொருட் + அன்று
C) நடுவிகந்தாம் = நடுவு + இகந்து + ஆம்
D) மைத்தடங்கண் = மை + தடங்+ கண்
17. தவறாக பிரிக்கப்பட்டுள்ள சொல்லை காண்க:
A) இலக்கியம் = இலக்கு + இயம்
B) செம்மொழி = செம்மை + மொழி
C) தமிழ்மொழி = தமிழ் + மொழி
D) வேரூன்றிய = வேரு + ஊன்றிய
18. பின்வருவனவற்றுள் ‘ஈறு போதல்’ ‘இனமிகல்‘ என்னும் விதிகளின்படி புணராதது
A) நெடுங்கடல்
B) செங்கடல்
C) கருங்கடல்
D) கருங்குயில்
19. பெருமை + களிறு = பெருங்களிறு புணர்ச்சி விதியைத் தேர்ந்தெடு
A) ஈறு போதல், இடையுகரம் இ ஆதல்
B) ஈறு போதல் அடியகரம் ஐ ஆதல்
C) ஈறுபோதல், ஆதி நீடல் முன்நின்ற மெய்த்தை
D) ஈறுபோதல், இனமிகல
20. தவறானதை காண்க: (பிரித்து எழுதுக)
A) வீடினதன்றறன் = வீடின + தன்று + அறன்
B) கருநிறத்தரக்கியர் = கருமை + நிறத்து + அரக்கியர்
C) தாதூதி = தாது + ஊதி
D) இன்னரும்பொழில் = இனிமை + அருமை + பொழில்
விடைகள்:
11.C, 12.A, 13.A, 14.A, 15.B, 16.C, 17.D, 18.B, 19.D, 20.A
– தொடரும்