ஜூன் ஒன்றாம் தேதி இந்தியா கூட்டணி கட்சிகள் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு!

Viduthalai
3 Min Read

சென்னை, மே 30- ‘இந்தியா’ கூட்டணி கட்சி களின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ப தற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற ஒன்றாம் தேதி டில்லி செல்கிறார். அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆலோசனை நடத்துகிறார்கள்.

‘இந்தியா’ கூட்டணி
நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணிக்கு எதிராக காங்கிரஸ், தி.மு.க. உள்பட 28 கட்சிகள் இணைந்து, ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கின. கூட்டணியின் தலைவராக அகில இந்திய காங்கிரஸ் கட்சி யின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இருக்கிறார். 7 கட்டங்களாக நடந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரச்சாரம் அனல் பறந்து வருகிறது.
இந்நிலையில் கடைசிக் கட்ட தேர்தல் வருகிற ஒன்றாம் தேதியுடன் முடிவடைகிறது. இதன்மூலம் 7 கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடக்கிறது. நாட்டை யார் ஆளப்போகிறார்கள்? என்ற முடிவு அன்றைய நாள் தெரிந்துவிடும். இந்தத் தேர்தல் முடிவை இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளும் ஆவ லோடு எதிர்நோக்கி உள்ளன.

டில்லியில் ஆலோசனைக் கூட்டம்
இந்த பரபரப்பான சூழ்நிலையில் ‘இந்தியா’ கூட்டணியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக அந்த கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டில்லியில் ஒன்றாம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் இந்தியா கூட்டணி யின் அடுத்தகட்ட நகர்வுகள், செயல்பாடுகள் போன்ற அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பல முடிவுகள் எடுக்கப்பட்டலாம் என்று பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
டில்லியில் நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத் தில் பங்கேற்க வருமாறு ‘இந்தியா’ கூட்டணியில் இடம் பெற்றுள்ள அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் கூட்டணியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனித்தனி யாக அழைப்பிதழ் கடிதம் அனுப்பி உள்ளார். எனவே, இந்த கூட்டத்தில் பங்கேற்க ‘இந்தியா’ கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.
மேற்கு வங்காளத்தில் ‘ராமெல்’ புயல் பாதிப்பு, 9 தொகுதிகளில் ஒன்றாம் தேதி வாக்குப்பதிவு போன்ற காரணங்களால் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க முடியாது என்று மேற்கு வங்காள முதலமைச்சரும். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலை வருமான மம்தா அறிவித்துள்ளார்.

மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.
இந்தக் கூட்டத்தில் தி.மு.க தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார். இதற்காக அவர் வருகிற ஒன்றாம் தேதியன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டில்லி புறப்பட்டுச் செல்கிறார். கூட்டம் முடிந்தவுடன், அன்றைய நாள் இரவே டில்லியில் இருந்து சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலமைச்சருடன் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலுவும் செல்கிறார்.

அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை
இந்த நிலையில் சென்னை அண்ணா அறி வாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 28.5.2024 அன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க.பொருளாளர் டி.ஆர். பாலு, முதன்மைசெயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் வழக்குரைஞர் ஆர்.எஸ்.பாரதி, துணை பொதுச்செயலாளர் இ.பெரியசாமி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டம் காலை 11 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடை பெற்றது.
மறைந்த முதலமைச்சர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா (ஜூன் 3ஆம் தேதி) கொண்டாட ஏற்பாடுகள் குறித்தும், நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு அன்று தி.மு.க. முகவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும், டில்லியில் ஜூன் ஒன்றாம் தேதி அன்று நடைபெறும் ‘இந்தியா’ கூட்டணி ஆலோ சனைக் கூட்டத்தில் தி.மு.க. சார்பில் முன்வைக்க வேண்டிய கருத்துகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *