குன்னூரில் பெரியாரியல் பயிற்சி பட்டறை தொடங்கியது

1 Min Read

அரசியல்


குன்னூர்,செப்.2
– நீலமலை மாவட்டம், குன்னூர், ரெயிலிகாம்பௌன்ட்-ராக்பிரோடு, டாக்டர் கவுதமன் இல்லத்தில் இன்று (2.9.2023) பெரியாரியல் பயிற்சி பட்டறை தொடங்கியது. மாவட்ட துணைத் தலைவர் யா.சத்தியநாதன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் மு.நாகேந்திரன் தலைமையேற்று உரையாற்றினார். பொதுக்குழு உறுப்பினர் சி. இராவணன், மாவட்ட ப.க. தலைவர் ஈஸ்வரன், மாவட்ட ப.க. செயலாளர் இரா.வாசுதேவன், மாவட்ட இளைஞரணி செயலாளர் சா.ஜீவா ஆகியோர் முன்னிலையேற்று உரையாற்றினார். தந்தை பெரியார் மருத்துவக் குழும மாநில தலைவர் டாக்டர் இரா கவுதமன் பயிற்சிப் பட்டறையினை தொடங்கி வைத்து உரையாற்றினார். பேராசிரியர் ப.காளிமுத்து தந்தை பெரியார் ஓர் அறிமுகம் என்ற தலைப்பில் முதல் வகுப்பெடுத்தார். கழக மாநில ஒருங்கிணைப்பாளர் பெரியாரியல் பயிற்சி பட்டறை பொறுப்பாளர் இரா.ஜெயக்குமார் நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தினார். தொடர்ந்து வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *