பக்தி ஒழுக்கத்தை வளர்க்கிறதாம் தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த அர்ச்சகர் கைது

1 Min Read

கோவையைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் சென்னையில் தங்கி பிரபல சேனலில் தொகுப்பாளனியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர், சமீபத்தில் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில், “கடந்த 2021 ஆம் ஆண்டு மண்ண டியில் உள்ள காளிகாம்பாள் கோவிலுக்குச் சென்றிருந்தேன். அப்போது கோவில் அர்ச்சக ரான கார்த்திக் முனுசாமி என்பவருக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து எனது வீட்டுக்கு வந்த அவர், ஜூஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்து என்னை பாலில் வன்கொடுமை செய்தார். நான் மயக்கம் தெளிந்து பார்தத போது, எனது காலில் விழுந்த அவர், என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறியதாகவும் தெரிவித்திருந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக என்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி வந்த காளிகாம்பாள் கோயில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி, என்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி விட்டார். இதுகுறித்து அவரது வீட்டிற்கு சென்று கேட்டபோது அவரின் சித்தப்பா காளிதாஸ் என்னை மிரட்டினார்.

இதற்கிடையே நான் கர்ப்பமடைந்த காலத்தில் என்னை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கருக்கலைப்பு செய்தனர்” என்று குறிப்பிட்டிருந்தார் அந்த தொகுப்பாளினி.

இதனையடுத்து விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல்துறை யினர் காளிகாம்பாள் கோவில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி, அவரது சித்தப்பா காளிதாஸ் உட்பட அய்ந்து பேர் மீது கருக்கலைத்தல், பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல், தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், இந்த வழக்கில் கார்த்திக் முனுசாமி திடீரென தலைமறைவானார். இதனால் அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் கார்த்திக் முனுசாமி கொடைக்கானலில் தலைமறைவாக இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் கொடைக்கானல் சென்ற காவலர் அவரை கைது செய்து காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *