வருந்துகிறோம்

1 Min Read

காரைக்குடி கழக மாவட்ட பகுத் தறிவாளர் கழக மேனாள் தலைவர் ப.சுந்தரம் (வயது 83) நேற்று (28.5.2024) இரவு 11.30 மணியளவில் அவரது இல்லத்தில் இயற்கை எய் தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத் துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவருக்கு வாழ்விணையர் நாக லட்சுமி, மகன் வள்ளுவன், மகள் கள் பொற்செல்வி, பூங்கோதை ஆகியோர் உள்ளனர்.
காரைக்குடியில் இயங்கும் ஒன்றிய அரசு நிறுவனமான சிக்ரியில் நிர்வாக அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இளமை காலம் தொட்டே தி.மு.கழகத்திலும், பகுத்தறிவாளர் கழகத்திலும் தன்னை முழு மூச்சாக ஈடுபடுத்திக் கொண்டவர்.
குறிப்பாக விடுதலை நாளிதழ் சந்தா திரட்டுவதில் தேனீ போல பணியாற்றி தொடர்ந்து செயலாற்றியவர்.

அதேபோல் கழக நிகழ்வுகள் அனைத்திற்கும் நிதி திரட்டுவதிலும் தனித்துவத்துடன் இயங்கியவர்.
மறைந்த ப.சுந்தரம் அவர்கள் தான் மறைந்த பின்பு எவ்வித மூட சடங்குகளும் செய்யப் படாமல் தன்னை அடக்கம் செய்ய வேண்டும் என்று தன் கைப்பட எழுதி மாவட்ட கழகக் காப்பாளர் சாமி.திராவிட மணியிடம் வழங்கியுள்ளார். அதன்படியே ஏற்பாடுகளும் செய்யப் பட்டு அவருடைய இறுதி நிகழ்வு இன்று (29.5.2024) மாலை 4 மணிக்கு நடைபெற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *