அஞ்ச வேண்டாம் சென்னை ஏரிகளில் 5 மாதத்திற்கு தேவையான குடிநீர் இருப்பு நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, மே 29- சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்கு பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஆகிய ஏரிகளில் இருந்து பெறப்படும் நீர் மூலம் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தேவை அதிகரிப்பு மற்றும் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா நதி நீர் திட்டத்தின் கீழ் நீர் வினியோகம் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏரிகளில் நீர் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டது. தற்போதைய நிலையில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் வீராணம் ஏரி கடந்த சில மாதங்களாகவே வறண்டு கிடக்கிறது. பூண்டி ஏரியில் பராமரிப்பு பணிகள் செய்ய வேண்டியிருப்பதால் நீர் சேமிக்கமுடியாத நிலையும் இருந்து வருகிறது.

இதுதவிர புழல் ஏரியில் 2 ஆயிரத்து 914 மில்லியன் கன அடி (2.9 டி.எம்.சி.), செம்பரம்பாக்கத்தில் 1,842 மில்லியன் கன அடி (1.8டி.எம்.சி.) இருப்பு உள்ளது.சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை ஏரிகளில் சொற்ப அளவிலேயே குடிநீர் இருக்கிறது. தற்போதைய நிலையில் ஏரிகளில் 5 ஆயிரத்து 556 மில்லியன் கன அடி (5.5 டி.எம்.சி.) இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 7 ஆயிரத்து 271 மில்லியன் கன அடி (7.2டி.எம்.சி.) இருப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ஏரியில் இருக்கும் நீர் மூலம் அடுத்த 5 மாதத்திற்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *