தேர்தல் ஆணையம்: நேர்மையான ஆணையமாக செயல்படுகிறதா? – டி.ராஜா கேள்வி

viduthalai
3 Min Read

ஈரோடு, மே 28- ‘ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள், தேர்தல் ஆணையத்தின் செயல் பாடு குறித்து அய்யம் கொள்ளத் தொடங்கியுள்ளனர்’, என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா பேசினார்.

சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் செயலாளருமான தியாகி சி.எஸ் சுப்பிரமணியம் நினைவாக, ஈரோடு மாவட்டம் கோபியில் சிஎஸ்எஸ் அரங்கம் (மார்க்சியப் பள்ளி மற்றும் நூலகம்) திறப்பு விழா நேற்று (27.5.2024) மாலை நடந்தது.

இந்த நிகழ்ச்சியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா கலந்து கொண்டு, பேசியதாவது:

‘கம்யூனிசம் என்பது வெறும் அரசியல் சித்தாந்தம், கொள்கை மட்டுமல்ல. கம்யூனிசம் ஒரு பண் பாடு; அறநெறி. புற வாழ்விலும், அகவாழ்விலும் மக்களுக்காக தன்னை அர்ப்பணிப்பவர்தான் நல்ல கம்யூனிஸ்ட்டுக்கான இலக் கணம். கம்யூனிஸ்டுகள் மக்களை யும், நாட்டையும் நேசிப்பவர்கள்.
வர்க்க பேதம், ஜாதி பேதம் இல்லாத இந்தியாவை உருவாக்கு வது, ஆண், பெண் சமத்துவம் கொண்டு வருதல் போன்றவற்றை கம்யூனிஸ்டுகள் தான் மக்களிடம் கொண்டு செல்ல முடியும். இன்று நம் முன் இருக்கும் சவால் சாதார ணமானது அல்ல. மதவெறி, பாசிஸ்ட் பிடியில் இருந்து, பாஜக, ஆர்எஸ்எஸ். பிடியில் இருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டும்.

இதற்காக கம்யூனிஸ்டுகள் முன் னணியில் நின்று களம் காண வேண்டும். மக்களவைத் தேர்தல் முடிவுகளில் பாஜக தோற்கடிக்கப் படும் என நம்புகிறோம். இண்டியா கூட்டணி மூலம் மாற்று ஆட்சி அமையும் என்ற நம்பிக்கை நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது. பா.ஜ.க.வைத் தோற்கடிக்க, இந்திய மக்கள் ஆவேசத்துடன் முடிவு செய்துள்ளனர்.

தேர்தல் ஆணையம் அரசியல் சட்ட நெறிமுறைகளுக்கு உட் பட்டு செயல்படும் நேர்மையான ஆணையமாக செயல்படுகிறதா? என்பது கேள்வியாக எழுந் துள்ளது. மதவெறியைத் தூண்டும் வகையில் பிரதமர் மோடி பேசுகிறார் என நான் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தேன்.

அவரிடம் விளக்கம் கேட்பதற்கு பதிலாக, நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, பாஜக தலைவர் நட்டா வுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதுகிறது. கூடவே, காங்கிரஸ் தலைவருக்கும் ஒரு கடிதம் எழுது கிறது. தேர்தல் ஆணையம் சுதந்திர மாக செயல்படுகிறதா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.
ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள், தேர்தல் ஆணை யத்தின் செயல்பாடு குறித்து சந்தேகம் கொள்ளத் தொடங்கி யுள்ளனர்.

இருப்பினும், மக்கள் தீர்ப்பு பாஜகவுக்கு எதிரான தீர்ப்பாக இருக்கும். நாட்டை காப்பாற்றும் வகையில் இந்த தேர்தல் முடிவு அமையும். அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சட்டத்தை மாற்ற வேண்டும் என பாஜக நினைக்கிறது. மீண்டும் மோடி பிரதமரானால், அதனைச் செய்வார் என்று சொல் கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு பேரிடரை நாம் எதிர்நோக்கி இருக்கிறோம்.

முன் எப்போதும் இல்லாத வகையில், நாடாளுமன்றத்தில் 140க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பா.ஜ.க. ஆட்சியில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள னர். நாடாளுமன்றம் முடங்கி னால், ஜனநாயகம் செத்துப் போகிறது. இதனை மாற்ற, நாடாளுமன்றத்தில், இடதுசாரி கள், முற்போக்காளர்களின் எண் ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

இண்டியா கூட்டணியைக் கண்டு பிரதமர் மோடி அச்சப்படு கிறார். அதனால், அந்நிய நாடுக ளுடன் தொடர்புபடுத்தி பேசுகி றார். நெருக்கடியான காலகட்டத் தில் இந்தியா உள்ளது. இந்த நிலையில் ஜனநாயகத்தையும், நாட் டையும் காக்க கம்யூனிஸ்ட் கொள் கைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
தோழமையினரை அரவ ணைத்து செல்ல வேண்டும்’, என்று அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செய லாளர் முத்தரசன், கே.சுப்பராயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *