சென்னை, மே27- அகில இந்திய பாங்க் ஆப் பரோடா ஓபிசி நல சங்கத்தின் 8ஆவது அகில இந்திய கருத்தரங்கக் கூட்டம் மற்றும் சங்கத்தின் 30ஆம் ஆண்டு விழா நேற்று (26.5.2024) காலை 10 மணிக்கு சென்னையில் பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் ஹோட்டல் அபு பேலஸ் விடுதி அரங்கில் நடைபெற்றது.
பாங்க் ஆப் பரோடா பிற்படுத்தப்பட்ட பணியாளர்கள் நலச்சங்கத் தலைவர் அமித் ஜாதவ் தலைமை உரையாற்றினார். பாங்க் ஆப்பரோடா பிற்படுத்தப்பட்ட பணியா ளர்கள் நலச்சங்கப் பொதுச்செயலாளர் எம்.ஜார்ஜ் பெர்னாண் டஸ் வரவேற்றார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தொல்.திருமாவளவன் தலைமை யேற்று சிறப்புரை ஆற்றினார்.
ராஷ்டிரிய சமாஜ் கட்சியின் நிறுவனரும் மகாராட்டிரா மேனாள் அமைச்சருமான மகாதேவ் ஜங்கர், பாங்க் ஆப் பரோடா சென்னை மண்டல பொது மேலாளர் சரவ ணக்குமார், அகில இந்திய பிற்படுத்தப்பட்ட பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி, தமிழ் நாடு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி, ராஷ்டிரிய சமிதி கட்சி மேனாள் அமைச்சர் எஸ்.எல். அக்கிசாகர், மூத்த வழக்குரைஞர் ஆர்.நடராஜன், (ஓபிசி வாய்ஸ் இதழாசிரியர் குழு) ஊழியர்கள் நலச் சங்கங்களின் தலைவர்கள், வங்கியின் உயர் அதிகாரிகள், பிற்படுத்தப்பட்டோர் நல சங்க அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
பொருளாளர் சி.ஜெயக்குமார் நன்றி கூறினார்.
நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும் பாங்க் ஆப் பரோடாவின் 18 மண்டலங்களிலிருந்தும் ஓபிசி நலச் சங்கத்தினர் பெருமளவில் திரண்டு கருத்தரங்கக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அகில இந்திய பாங்க் ஆப் பரோடா ஓபிசி நல சங்கத்தின் 8ஆவது அகில இந்திய கருத்தரங்கக் கூட்டம் & 30ஆம் ஆண்டு விழா சென்னையில் வெற்றிகரமாக நடைபெற்றது
Leave a Comment