கால் இடறி விழுந்ததால் வைகோவுக்கு தோளில் எலும்பு முறிவு

1 Min Read

சென்னை, மே 27 குமரி மாவட்ட மதிமுக செய லாளர் வெற்றிவேல் மகள் திருமண விழா நேற்று (26.5.2024) நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக கட்சி யின் பொதுச் செய லாளர் வைகோ நேற்று முன்தினம் (25.5.2024) நெல்லை சென்றார்.

அங்கு பெருமாள்புரத்தில் உள்ள தனது சகோ தரர் ரவிச்சந்திரன் வீட்டில் தங்கியிருந்தபோது, திடீரென கால் இடறி கீழே விழுந்ததில் வைகோ வுக்கு வலது தோளில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டது. மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை புறப்பட்டார்.
நேற்று காலை தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னைவந்த வைகோ, அண்ணா நகரில்உள்ள அவரது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அவரது உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். இன்றுஅல்லது நாளை சிறிய அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.
இது தொடர்பாக மதிமுக முதன்மைச் செயலாளர் துரைவைகோ தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “சிறிய அறுவை சிகிச்சைக்குப் பிறகு வைகோ விரைவில் முழுமையாக குணமடைவார். அச்சம் கொள்ளும் வகையில் வேறுஎதுவும் இல்லை” என தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *