பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவுநாள் (3.9.1973)

Viduthalai
2 Min Read

அரசியல்

தமிழறிஞர்கள் வரிசையில் தனித் தன்மையானவர். இலக்குவனார். தஞ்சாவூர் மாவட்டம் வாய் மேடு என்னும் கிராமத்தில் சிங்கார வேலர் – இரத்தி னம் அம்மையார் ஆகி யோரை பெற்றோராகக் கொண்டு எளிய குடும்பத் தில் 17.11..1910இல் பிறந்தார். உள்ளூர் தொடக்கப் பள்ளி யில் படித்த அவர் முது கலைப் பட்டங்களையும் பெற்றார். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் கற்றுத் தேர்ந்தவர். தொல் காப்பியத்தை இவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார் என்பது அசாதா ரணமானது. அறிஞர் அண்ணா முதல் அமைச்சராக போப்பைச் சந்தித்த போது இந்நூலினைத்தான் நினைவுப் பரிசாக அளித்தார். எழிலரசி உள்ளிட்ட கவிதை நூல்கள், தமிழ் கற்பிக்கும் முறை, அமைச்சர் யார், தொல்காப்பிய ஆராய்ச்சிகள், இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல், வள்ளுவர் வகுத்த அரசியல் உள்ளிட்ட ஆய்வு நூல்கள், என் வாழ்கைப்போர், கருமவீரர் காம ராசர் எனும் வரலாற்று நூல்கள். திருக் குறள் எளிய பொழிப்புரை, தொல்காப் பிய விளக்கம் – தொல்காப்பிய எழுத்ததி காரம் உள்ளிட்ட உரை நூல்கள் மற்றும். தொல்காப்பியம் உள்ளிட்ட ஒன்பது ஆங்கில அரிய நூல்களை எழுதியுள் ளார்.

சங்க இலக்கியம், குறள் நெறி, திராவிடக் கூட்டரசு உள்ளிட்ட ஏடு களின் ஆசிரியர், திராவிடன் பெட ரேசன் என்ற ஆங்கில இதழையும் நடத்தியுள்ளார். தமிழாசிரியராக, விரி வுரையாளராக, பேராசிரியராக, துறைத் தலைவராகப் பரிணமித்தவர். திருவாரூ ரில் தமிழாசிரியராய் பணி யாற்றிய போது அவரின் மாண வராக இருந்தவர் தான் முத்தமிழறிஞர் கலைஞர் .தமிழ் உணர்வுடன் சுயமரியாதைப் பண்பை யும் எனக்கு ஊட்டியவர் இலக்குவனார் என்று ‘நெஞ்சுக்கு நீதி’ நூலில் கலைஞர் குறிப்பிட்டுள் ளார். கல்லூரிப் பேராசிரி யர்கள் சார்பாக சென் னைப் பல்கலைக்கழகத்தின் அகாட மிக் கவுன்சில் உறுப் பினராகவும், சென்னைப் பல்கலைக் கழக ஆசிரியர் குழுவின் துணைத் தலை வராகவும், தமிழகப் புலவர்க்குழு செய லாளராகவும் பொறுப்பில் இருந்தவர். 

ஹிந்தி எதிர்ப்புப் போராலும், தமிழ் உணர்வு பெருநடைப் பயணத்தாலும் சிறைவாசத்தை அனுபவித் தவர். தமிழ்நாட்டில் கல்லூரி முதல் வர்கள் குறைந்த அளவேனும் தமிழ்ப்புலமை பெற்றிருக்க வேண் டும். கல்லூரிப் பாடத் திட்டத்தில் தமிழே முதற்பாட மொழியாகவும் ஏனைய மொழிகள் இரண்டாம் பொது மொழியாகவும் இருக்க வேண்டும். தமிழ்ப் பாடத்தேர் வில் திருக்குறளுக் கென்றே தனித் தேர்வுத் தாள் இருக்க வேண்டும் என் பது இலக்குவனாரின் கல்விக் கொள்கை. இலக்குவனார் பெயரில் அவர் பிறந்த வாய்மேடு உயர்நிலைப் பள்ளிக்கு அவர் பெயரே தற்போது சூட்டப் பட்டு உள்ளது. ‘தமிழ்நாட்டின் உணர்வுக்கும் தமிழ்மொழியின் உயர் வுக்கும் உழைப் பதே எனது கடமை, தமிழ்ப் போரே எனது வாழ்க்கைப் போர் என்னும் குறிக் கோளை வாழ்வின் உயிரென ஏற்றுக் கொண்டு செயல்பட்ட இலக்குவனார் மறைந்த நாள் இன்று.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *