ஊக்கத்தொகை

1 Min Read

காரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்ற பூவித்தா இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் 497 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் மூன்றாம் இடம் பிடித்தார். அவர் திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழக ஆசிரியரணி தலைவர்
கோ. திருப்பதியால் பயிற்றுவிக்கப்பட்ட மாணவி ஆவார். அவர் பணியை சிறப்பிக்கும் வகையில் ஆசிரியர் கோ. திருப்பதிக்கு மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் ஊக்கத்தொகை ரூ. 1000த்தை மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன் வழங்கினார். அதை பெற்றுக் கொண்ட அவர் விடுதலை நாளிதழ், தந்தை பெரியார் அவர்களால் தான், நான் இந்த நிலைக்கு உயர்ந்து இருக்கிறேன். அதை உணர்ந்து, அவர் கொள்கைகளை தொடர்ந்து 90 ஆண்டுகளாக மக்களிடையே கொண்டு சேர்க்கும் விடுதலை நாளிதழுக்கு தன் சார்பில் 10 சந்தாக்களை பெற்று தருகிறேன் என்று உறுதி அளித்தார். அவருக்கு மாவட்ட திராவிடர் கழகம் நன்றி தெரிவித்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *