புதுச்சேரி முழுவதும் தொடர்ச்சியாக பிரச்சாரம் கழக இளைஞரணி – மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

2 Min Read

புதுச்சேரி, மே 25– புதுச்சேரி இராசா நகர் பெரியார் படிப்பகத்தில் 19.5.2024 அன்று மாலை 6 மணி அளவில் புதுச்சேரி மாநில இளை ஞரணி, திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம் சிறப் பாக நடைபெற்றது.
நிகழ்வில் மாவட்ட இளைஞ ரணி செயலாளர் ச.சித்தார்த்தன் தலைமை வகித்தார் மாவட்டத் தலைவர் வே.அன்பரசன், மாவட்ட செயலாளர் கி. அறிவழகன் மாவட்ட காப்பாளர் இர.இராசு, மாவட்ட இளைஞரணி தலைவர் தி.இராசா ஆகியோர் முன்னிலை வகித்தனர்

நிகழ்வின் தொடக்கமாக அனை வரையும் வரவேற்று திராவிட மாணவர் கழக மாவட்ட தலைவர் ப.இராகபிரியா அனைவரையும் வரவேற்றார். திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரபாண்டியன் கூட்டத்தின் நோக்கங்களை எடுத்துரைத்தார் மாநில இளைஞரணி செயலாளர் நாத்திகப் பொன்முடி சிறப்புரை ஆற்றினார் புதுவை மாநில தலைவர் சிவ.வீரமணி அவர்கள் நிறைவுரை ஆற்றினார்.

 

திராவிடர் கழகம்

நிகழ்வில் பொதுக்குழு உறுப் பினர் லோ.பழனி பகுத்தறிவாளர் கழக மாநில துணை செயலாளர் எழுத்தாளர் இளவரசி சங்கர். விடுதலை வாசகர் வட்ட செயலா ளர் ஆ.சிவராசன், கழக பேச்சாளர் யாழ்.திலீபன், சு.கமேஷ், விடுதலை வாசகர் வட்ட தலைவர் கோ.மு.தமிழ்செல்வன், பகுத்தறிவாளர் கழகத் தலைவர் நெ.நடராசன், நகராட்சி தலைவர் மு.ஆறுமுகம், செய்தியாளர் பே. ஆதிநாராயணன், மகளிரணி வாசுகி பாலகிருஷ்ணன், களஞ்சியம் வெங்கடேசன் ஆகியோர் உரை யாற்றினர்.
இறுதியாக மாவட்ட இளைஞ ரணி துணைத் தலைவர் ச.பிரபஞ்சன் நன்றி கூறினார்

கூட்டத்தில், உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடான விடுதலை நாளிதழுக்கு புதுச்சேரி மாவட்ட கழகத்துடன் இளைஞரணி – மாணவர் கழகம் இணைந்து அதிக அளவில் சந்தா வழங்குவது என வும், விடுதலை நாளிதழுக்கு வயது 90 வரும் ஜூன் 1 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெறும் விழாவில் புதுச்சேரி மாவட்ட கழகம் சார்பில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிப்பது எனவும், சுயமரியாதை இயக்க நூற் றாண்டு விழா – குடிஅரசு நூற் றாண்டு விழா பிரச்சாரம் தொடர்ச் சியாக புதுச்சேரி மாவட்டம் முழுவதும் பரவலாக நடத்துவது எனவும், இளைஞரணி திராவிட மாணவர் கழக அமைப்பை புதுச் சேரி நகரம் ஒன்றியம் கிளை கழ கங்கள் முழுவதும் கட்டமைப்பை உருவாக்குவது எனவும், “புதிய கல்விக் கொள்கை அவசரக்கதியில் புதுச்சேரியில் நடைமுறைப் படுத் தப்பட்டுள்ளது. பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது கழக இளைஞரணி மாணவர் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.அரசு உடனடியாக கைவிட வேண்டும்” எனவும் தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *