கோவில் திருவிழாவில் கொலை : இதுதான் பக்தியோ!

Viduthalai
1 Min Read

ராமநாதபுரம், செப்.3 ராமநாத புரம் மாவட்டம் கமுதி அருகே பெருநாழியில் உள்ள நிறைகுளத்து வள்ளியம்மன் கோவில் திருவிழா ஒரு வாரத்திற்கு மேலாக நடை பெற்று வருகிறது.

திருவிழாவை முன்னிட்டு 1.9.2023 அன்று நள்ளிரவில் ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைப் பார்க்க பொந்தம்புளி கிரா மத்தை சேர்ந்த முத்துராமலிங்கம் (வயது 38), இடிவிலகியை சேர்ந்த விவசாயி முனியசாமி (40) மற்றும் இதயராஜா (35) ஆகிய 3 பேர் சென்றுள்ளனர். இவர்கள் ஆடல்-பாடல் நிகழ்ச்சியை ஆரவாரம் செய்து பார்த்துக் கொண்டிருந்த தாக கூறப்படுகிறது. இதனால் பெருநாழியை சேர்ந்த சிலர் அங்கு வந்து, அவர்கள் 3 பேருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

பின்னர் இருதரப்பினருக்கும் அடிதடி ஏற்பட்டு, அரிவாள் மற் றும் ஆயுதங்களுடன் மோதிக் கொண்டனர்.இதில் இடிவிலகியை சேர்ந்த முனியசாமி அரிவாளால் வெட்டப்பட்டு சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். மற்ற அனை வரும் லேசான காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. 

இது குறித்து தகவல் அறிந்து வந்த பெருநாழி காவல்துறையினர், முனியசாமியின் உடலை உடற்கூராய்வு கமுதி அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முனியசாமிக்கு பாண்டிச்செல்வி என்ற மனைவியும், ஒரு மகன், மகளும் உள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பாக 10 பேர் மீது வழக் குப்பதிவு செய்து முத்துராமலிங்கம், இதயராஜா, அஜய், சரவணன், கிஷோர், ஓம் பிரகாஷ், பொன்ராஜ், கமலேசுவரன் ஆகிய 8 பேரை காவல்துறையினர் கைது செய் தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *