சென்னை தொழிலதிபர் திருமதி சரோஜ் கோயங்கா அவர்களுக்கு கழகத் தலைவர் ஆசிரியர் இரங்கல்

1 Min Read

சென்னையை வாழ்விட மாகப் பல ஆண்டு காலம் கொண்டிருந்தவரும், சிறந்த நிர்வாகத் திறமையாள ருமான திருமதி சரோஜ் கோயங்கா அவர்கள் இன்று 24.5.2024 முற்பகல் காலமானார் என்பதை அறிந்து வருந்துகிறோம்.

சென்னை எக்ஸ்பிரஸ் எஸ்டேட்ஸ் – சென்னை எக்ஸ்பிரஸ் மால் முதலிய பலவற்றை தனது முதுமை யிலும் சிறப்பாக நடத்தி வந்தவர். எவரிடமும் பான்மையுடனும், பண்புடனும் பழகியவர். அவரது மறைவினால் துயருறும் அவரது குடும்பத்தினர், அவ்வமைப்புகளின் ஊழியர்கள் அனைவருக்கும் நமது ஆறுதல் – மறைந்தவருக்கு நமது ஆழ்ந்த இரங்கல்.

நெருக்கடி கால நிலையை துணிவுடன் எதிர்த்து நின்றவர், கல்வி வள்ளல் காமராசரின் மிக நெருங்கிய நண்பரான தொழிலதிபர் இராம்நாத் கோயங்காவின் மருமகள் திருமதி சரோஜ் கோயங்கா அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மனிதநேயம் மிக்க அம்மணியார்.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

24.5.2024

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *