கடவுள் என்பதே ஒரு ஏமாற்று வேலை என்பது இப்பொழுது புரிகிறதா? கடவுள் தான் என்னை அனுப்பி வைத்தார் என்கிறார் பிரதமர் மோடி

viduthalai
1 Min Read

நான் மனித பிறவியே கிடை யாது. கடவுள் தான் என்னை, அவருடைய பணிகளை முடிப்பதற்காக பூமிக்கு அனுப்பியுள்ளார் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசி யுள்ளது பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சார களத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுகள் சர்ச்சையாகவும், பேசுபொரு ளாகவும் மாறி வருகின்றன. தனி யார் தொலைக்காட்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி அளித்துள்ள பேட்டி ஒன்று தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நான் சாதாரண மனிதனே அல்ல, கடவுளின் குழந்தை என்று பிரதமர் மோடி பேசிய பேச்சுகள் சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யப் பட்டு வருகிறது. இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சியில் பிரதமர் நரேந்திர மோடியிடம் சோர்வடையாமல் தொடர்ந்து எப்படி பணியாற்றுகிறீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு பிரதமர் மோடி,
“நான் எனது அம்மா இறக்கும் வரை என்னை சாதாரண ஒரு மனிதனாக தான் நினைத்தேன். ஆனால் அவர் இறந்த பிறகு என் வாழ்க்கையில் நடந்த, நடக்கும் நிகழ்வுகளை எல்லாம் இணைத்து பார்க்கும் போது நான் உயிரியல் ரீதியாக பிறக்கவில்லை என புரிந் தது. கடவுள் பூமியில் அவருடைய பணிகளை முடிக்க என்னை அனுப் பியுள்ளார் என்பதை முழுமையாக நம்புகிறேன்

ஆனால், நான் உணர்ந்தவற்றை சொல்கிறேன். நான் கடவுளின் கருவி மட்டும் தான். அவர் என்ன வெல்லாம் செய்ய நினைக்கிறாரோ அதை என் மூலம் செய்கிறார். நான் கடவுளை இதுவரைக்கும் பார்த்தது கிடையாது. பிறரைப் போல நானும் கடவுள் நம்பிக்கை கொண்டு வழிபட்டு வருகிறேன்” என்றார்.
தன்னைக் கடவுளாக உருவகப்படுத்திக் கொண்ட பிரத மர் மோடி, தேர்தல் முடிவதற்குள் இன்னும் என்னென்ன பேசப் போகிறாரோ என்று நெட்டி சன்கள் கேலி செய்து வருகின்றனர். அத்துடன் அவரது காணொலி தற்போது வைரலாகி வருகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *