முதுகலை மருத்துவ நுழைவுத் தேர்வில் மோசடி எய்ம்ஸ் மருத்துவர்கள் இருவர் உள்பட 5 பேர் கைது

viduthalai
1 Min Read

டேராடூன், மே 23– எம்.டி., எம்.எஸ்., மற்றும் எம்.டி.எஸ். உள் ளிட்ட முதுகலை மருத்துவப் படிப் புகளில் சேர்வதற்கு எய்ம்ஸ் நிர்வா கத்தால் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு (INICET) நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான தேர்வு கடந்த 19.5.2024 அன்று நடைபெற் றது.

இந்நிலையில் இந்த தேர்வில் மோசடி செய்ததாக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் இருவர் உள்பட 5 பேரை டேரா டூன் காவல்துறையினர் கைது செய் துள்ளனர். இதன்படி அரியானா வைச் சேர்ந்த டாக்டர் அஜித் சிங்(44), பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் வைபவ் காஷ்யப் (23), அரியானாவைச் சேர்ந்த அமன் சிவாச்(24), விபுல் கவுரா(31) மற்றும் ஜெயந்த் (22) ஆகிய 5 பேர் காவல் துறையினரால் கைது செய் யப்பட்டுள்ளனர்.

இமாச்சலப் பிரதேச மாநிலம் காங்க்ரா பகுதியில் தேர்வு எழுதிய 3 தேர்வர்கள், வினாத்தாளை கை பேசி மூலம் ஒளிப்படம் எடுத்து அதை மருத்துவர் வைபவ் காஷ்யப் மற்றும் மருத்துவர் அஜித் சிங்கிற்கு அனுப்பியதாகவும், அவர்கள் அதற் கான பதில்களை அனுப்பி வைத்த தாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தேர்வில் உதவி செய்ய மொத் தம் ரூ.50 லட்சம் ஒப்பந்தம் போடப் பட்டதாகவும், தேர்வு முடிந்தவு டன் ரூ.25 லட்சம் வழங்கப்பட்ட நிலையில், முடிவுகள் வெளிவந்த பிறகு மீதி ரூ.25 லட்சத்தை பெறுவ தற்கு இவர்கள் தயாராக இருந் தனர் என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

அதே போல் இரண்டு மருத் துவர்களுக்கும் தலா ரூ.2 லட்சம் வழங்குவதாக ஒப்பந்தம் செய் துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *