விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் பயங்கர தீ விபத்து 40 படகுகள் எரிந்து நாசம்

1 Min Read

தமிழ்நாடு

விசாகப்பட்டினம், நவ.20 ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் பயங்கர தீ விபத்து  ஏற்பட்டது. இதில் சுமார் 40 படகுகள் எரிந்து நாசமாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 

விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்களின் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளில் சுமார்  40 படகுகள் எரிந்து சாம்பலாகின. ஒரு படகில் இருந்து பரவிய தீ, அடுத்தடுத்து மற்ற படகுகளுக்கு பரவி பெரும் தீ விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. மற்றொரு தரப்பில்,  அடையாளம் தெரியாத நபர், படகு களுக்கு தீ வைத்ததாகவும் கூறி வருகின்றனர். ஆனால், தீ விபத்தின்போது, படகில் இருந்த எரிவாயு உருளைகள் பெரும் சத்தத்துடன் வெடித்து சிதறியதால், அதுதான் தீ விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.  இதுகுறித்து விசாரணை  காவல்துறையினர்,   நடத்தி வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *