ராணிப்பேட்டை, மே 23- ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஒன்றியம், காவேரிப்பாக்கம் ஒன்றியங்களில் உள்ள அனைத்து பஞ்சாயத்து தலைவர்களையும் சந்தித்து விடுதலை நாளிதழின் அவசியம், முக்கியத்துவத்தையும், தமிழர் தலைவர் 60 ஆண்டுகளுக்கு மேல் ஆசிரியராக பணிசெய்து தந்தைபெரியாரின் கொள்கைகளை தமிழ்நாட்டின் உரிமைகளை தமிழனின் உரிமைகளையும் காத்து உலகம் முழுமைக்கும் விடுதலை நாளேடு செல்கிறது தமிழர்களின் மூச்சு காற்று விடுதலை என்பதை விளக்கி, கடந்த 17,18 -05-2024 வெள்ளி, சனிக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் முதற்கட்டமாக தலைமைக்கழக அமைப்பாளர் பு.எல்லப்பன் ,மாவட்ட தலைவர் சு.லோகநாதன்மாவட்ட செயலாளர் செ.கோபி, காவேரிப்பாக்கம் பேரூராட்சி மேனாள் தலைவரும், நகர தி.மு.க. மேனாள் செயலாளருமான போ.பாண்டுரங்கன் ஆகியோர் மாவட்டம் முழுக்க விடுதலை சந்தா சேர்க்கும் பணியில் ஈடுபட்டனர். சந்தித்த அனைவரும் நல்ல ஆதரவும், ஊக்கமும் வழங்கி பாராட்டினர். அடுத்து அரக்கோணம் ஒன்றியம், நெமிலி ஒன்றியம் விடுதலை சந்தா சேர்க்கும் பணி தொடங்க முடிவெடுக்கப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ‘விடுதலை’ சந்தா சேர்க்கும் தீவிர பணியில் தோழர்கள்
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books