கொல்கத்தா,மே 22– உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதியான அபிஜித் கங்கோபாத்யாய், நாடா ளுமன்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க. சார்பில் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள தம்லுக் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதிக்கு வரும் 25ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனிடையே கடந்த 15ஆம் தேதி ஹல்தியா பகுதியில் நடைபெற்ற பா.ஜ.க. தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அபிஜித் கங்கோபாத்யாய், மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி குறித்து தரக்குறைவான முறையில், மிகவும் மோசமான விமர்சனத்தை முன் வைத்ததாக கூறி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகார் தொடர்பாக கடந்த 17ஆம் தேதி அபிஜித்துக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருந்த நிலையில் கடந்த 20.5.2024 அன்று அதற்கு அவர் விளக்கம் அளித்து இருந்தார்.
இந்நிலையில், அபிஜித்தின் பேச்சுக்கள் தேர்தல் விதி முறைகளை மீறியது என தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இதையடுத்து இன்று மாலை 5 மணி முதல் அடுத்த 24 மணி நேரத்திற்கு அபிஜித் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட தடை விதித்து உத்தர விடப்பட்டுள்ளது. மேலும் பொது வெளியில் பேசும் போது கவனத்துடன் பேச வேண்டும் எனவும் அவரை தேர்தல் ஆணையம் எச்சரித் துள்ளது. அவரது பேச்சுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மட்டுமின்றி பல்வேறு கட்சிகளை சேர்ந்த வர்களும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.