தி.மு.க. தணிக்கைக் குழு உறுப்பினரும், மேனாள் மாநில என்.ஜி.ஓ. சங்கத்தின் பொதுச் செயலாளரும், சீரிய பகுத்தறிவாளரும், நம்மிடம் மிகவும் நேசம் கொண்டவரு மான பாளையங்கோட்டை மானமிகு சுப. சீத்தாராமன் அவர்களின் மருமகன் – ம.தி.தா. இந்துக் கல்லூரி மேனாள் பேராசிரியர் முனைவர் அ. சுந்தரம் (சிறந்த பகுத்தறிவாளர்) உடல் நலக் குறைவு காரணமாக மறைவுற்றார் என்ற தகவல் அறிந்து வருந்துகிறோம்.
அவர் பிரிவால் பெருந் துயரத்திற்கு ஆளாகியி ருக்கும் அருமைத் தோழர் மானமிகு சுப. சீத்தாராமன் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தலைவர்,
22.5.2024 திராவிடர் கழகம்
பாளையங்கோட்டை சுப. சீத்தாராமன் அவர்களின் மருமகன் மறைவிற்கு இரங்கல்

Leave a Comment