150 ‘விடுதலை’ சந்தாவை சேர்த்து அளிக்க அரூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு!

3 Min Read

அரூர், மே 22- அரூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 19.5.2024 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி அளவில் அரூர் சா. ராஜேந்திரன் இல்லத்தில் மாவட்ட கழக காப்பாளர் அ.தமிழ்ச்செல்வன் தலைமை யில் நடைபெற்றது.
வருகை தந்த அனைவரையும் மாநில கலைத்துறை செயலாளர் மாரி. கருணாநிதி வரவேற்று கருத்துரை யாற்றினார். மாநில மகளிரணி செயலாளர் தகடூர். தமிழ்ச் செல்வி, மாவட்ட பகுத்தறிவாளர்கள் கழக தலைவர் சா. இராசேந்திரன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக பொறுப் பாளர் தீ. சிவாஜி ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.
சி.பி.எம் கட்சியின் பொறுப்பாளர் சொக்கலிங்கம் விடுதலை இதழின் சிறப்புகளை விளக்கி கருத்துரை வழங்கி 5 விடுதலை சந்தாக்களை சேர்த்து அளிப்பது என அறிவித்தார்.
விடுதலை சந்தாக்களைச் சேர்த்து அளிப்பது குறித்து தலைமை கழக அமைப்பாளர் ஊமை. ஜெயராமன் சிறப்புரை யாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொறுப்பாளர்கள் தன் பங்கிற்காக விடுதலை சந்தா அளிப்பது குறித்து அறிவிப்பு செய்தனர். அதன்படி இளைஞரணி சஞ்சீவன் 5 விடுதலை சந்தா, ஒன்றிய பகுத்தறிவாளர் கழக செயலாளர் என்.டி.குமரேசன் 10 விடுதலை சந்தா, மகளிர் அணி தோழர்கள் வேல்விழி, கல்பனா, உமா, மணி மேகலை இணைந்து 10 சந்தா, வேப்பநத்தம் கிருஷ்ணன் 2 சந்தா, தீ.சிவாஜி 10 சந்தா, மாநிலக் கலைத்துறை செய லாளர் மாரி. கருணாநிதி 10 சந்தா, மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் அரூர் சா. ராஜேந்திரன் 25 சந்தா, கழக காப்பாளர் தமிழ்ச்செல்வன் 10 சந்தா, பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய செயலாளர் நல் ராஜா 5 சந்தா, பாப்பிரெட்டிப்பட்டி மணி சக்திவேல் 5 சந்தா, மாவட்ட மாணவர் கழகப் பொறுப்பாளர் அய்யனார் 5 சந்தா, வ.நடராஜ் 5 சந்தா, அய்யனார் 5 சந்தா, மாவட்டத் தலைவர் கு.தங்கராஜ் 5 சந்தா, மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணை செய லாளர் ராஜவேங்கன் 5 சந்தா, ஒன்றிய கழக செயலாளர் துரைராஜ் 1 சந்தா, பகுத்தறிவாளர் கழக தோழர் பிரேம் குமார் 1 சந்தா, மகளிரணி தோழர்கள் கலைச்செல்வி, விக்டோரியா ஒரு சந்தா என 150 சந்தாக்களை அளிக் கப்படுவதாக கழகத் தோழர்கள் அறிவிப்பு செய்தனர்.

கலந்துரையாடல் கூட்டத்தில், பெரியார் பெருந் தொண்டரும் கடத்தூர் நகர கழக தலைவருமான சுப.மாரிமுத்து மறைவிற்கு மாவட்ட கழகம் வீரவணக்கத்தை செலுத்துகிறது எனவும், தமிழர்களின் இல்லம்தோறும் ‘விடுதலை’ என்ற அடிப்படையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் அரூர் மாவட்ட கழகம் 150 விடுதலை சந்தாக் களை சேர்த்து அளிப்பது எனவும், கடந்த காலங்களில் வேப்பம்பட்டி,கொலகம்பட்டி, பறையப்பட்டி, பாப்பிரெட் டிப்பட்டி ஆகிய இடங்களில் பொதுக்கூட்டங்களையும், கலை நிகழ்ச்சியும் நடத்திய கழகப் பொறுப்பாளர்கள் சா.ராஜேந்திரன், கொலகம்பட்டி மணிமேகலை, பறையப் பட்டி வேல்விழி, பாப்பிரெட்டிப்பட்டி மாரி. கருணாநிதி மற்றும் துணை நின்ற கழகத் தோழர்களுக்கு பாராட் டையும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறது எனவும், அரூரில் கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி இந்தியக் கூட்டணிக் கட்சிகளின் திமுக வேட்பாளர் ஆ.மணியை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொது கூட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு, நன்றியை தெரிவித்துக் கொள்கிறது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இளை ஞரணி தோழர் சஞ்சீவன் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *