இரண்டு மாநிலங்களுக்கிடையே நடைபெறக்கூடிய ஓர் அற்புதமான ஒப்புதல் விழா!
தமிழர் தலைவர் ஆசிரியர் மணவிழாவிற்குத் தலைமையேற்று நடத்தி வைத்து வாழ்த்துரை
சென்னை, மே 22 எங்களுடைய ‘விடுதலை’ பத்திரிகை 90 ஆம் ஆண்டை நோக்கி நடைபோடக்கூடிய பத்திரி கையாகும். அதில், மணமகள் தந்தை இராமு அவர்கள் பணியாற்றியவர். அப்படிப்பட்ட அவர், தன்னுடைய மகளை நன்றாகப் படிக்க வைத்து, லண்டனில் பணி யாற்றக் கூடிய வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத் திருக்கிறார். ஒரு காலத்தில், பெண்களை வெளியூருக்கோ, வெளிநாட்டிற்கோ தனியாக அனுப்பக்கூடாது என்று சொல்வார்கள். அந்த நிலை இன்றைக்கு இல்லை.பெண்கள் எல்லாம் நன்றாகப் படித்து, வாழ்வில் முன்னேறி, சிறப்பான பணிகளில் சேர்ந்து, இன்றைக்கு எல்லாவற்றையும் முடிவு செய்யக்கூடிய நிலையில் இருக்கிறார்கள். பெற்றோர்கள் முடிவு செய்வதைவிட, அவர்கள் முடிவு செய்யக்கூடிய அளவிற்கு, நன்கு பக்குவமடைந்தவர்களாக இருக்கிறார்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
மணமக்கள் சினேகா – ராம்
கடந்த 14.2.2024 அன்று மாலை 6.30 மணியளவில், வடநெமிலி கிராமம், மாமல்லபுரத்தில் நடைபெற்ற சினேகா – ராம் வாழ்க்கை இணையேற்பு விழாவிற்குத் தலைமை வகித்து, மண விழாவினை நடத்தி வைத்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.
அவரது வாழ்த்துரை வருமாறு:
இரண்டு மாநிலங்களுக்கிடையே நடைபெறக்கூடிய மணவிழா!
மிகுந்த மகிழ்ச்சியோடு நடைபெறக் கூடிய அன்புச் செல்வர்கள் – நம்முடைய அருமை நண்பர் இராமு – நந்தினி ஆகியோருடைய செல்வி சினேகா அவர் களுக்கும், அதேபோல, மணமகன் ராம் ஆந்திராவில் ஓங்கோல் பகுதியைச் சார்ந்தவர் – இரண்டு மாநிலங் களுக்கிடையே நடைபெறக்கூடிய ஓர் அற்புதமான ஒப்புதல் திருவிழா – அதுதான் இந்த மணவிழா. அந்த வகையில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த திருவாளர்கள் வெங்கட்ராவ் – உஷாராணி ஆகியோருடைய செல்வன் ராம்- அவர்களுக்கும் நடைபெறக்கூடிய வாழ்க்கை இணையேற்பு விழா நிகழ்ச்சிக்கு வருகை தந்து முன் னிலை ஏற்றிருக்கக்கூடிய பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் தமிழ்ச்செல்வன் அவர்களே, பகுத் தறிவாளர் கழக மாநில பொருளாளர் தமிழ்ச்செல்வன் அவர்களே, பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் தோழர் கோவி.கோபால் அவர்களே,
நம் அனைவரையும் வரவேற்று உரையாற்றிய தோழர் இரா.கமலநாதன் அவர்களே,
இந்நிகழ்ச்சியில் மணமக்களுக்கு சுருக்கமாகவும், தெளிவாகவும் வாழ்த்துரையாற்றி அமர்ந்துள்ள கழகத் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே, கழகப் பொருளாளர் தோழர் குமரேசன் அவர்களே,
இந்நிகழ்வினை ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கக் கூடிய கழகத் துணைப் பொதுச்செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களே, இந்நிகழ்வில் கலந்து கொண்டிருக்கக் கூடிய கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் வீரமர்த்தினி அவர்களே,
மற்றும் இந்நிகழ்விற்கு வருகை தந்திருக்கின்ற பகுத்தறிவாளர் கழகத் தோழர்களே, திராவிடர் கழகத் தோழர்களே, கட்சிகளுக்கு அப்பாற்பட்ட நண்பர்களே, ஆந்திராவிலிருந்து வந்திருக்கக்கூடிய மணமகன் குடும்பத்தைச் சார்ந்த பெரியோர்களே,
ஆந்திராவில் இரவில் திருமணம் –
தமிழ்நாட்டில் அதிகாலையில் திருமணம்!
பொதுவாக ஆந்திராவில் இரவில்தான் திருமணம் செய்வார்கள். தமிழ்நாட்டில், அதிகாலையில் திருமணம் செய்வார்கள். ஆனால், இந்த மணவிழா அதுபோன்று நடைபெறவில்லை. சடங்குகளோ, சம்பிரதாயமோ இல்லாமல் இம்மணவிழா நடைபெறுகிறது.
மணமக்களுக்கிடையே
மொழிப் பிரச்சினையே இல்லை
மணமக்களுக்குப் புரிகின்ற மொழியில் சொல்கிறேன். மொழிப் பிரச்சினையே அவர்களுக்குள் இல்லை. ஏனென்றால், மணமகள் சினேகாவாக இருந்தாலும், ராம் அவர்களானாலும், இரண்டு பேரும் ஒருவருக் கொருவர் புரிந்துகொண்டு, அவர்கள் மொழியே தனி மொழி என்ற அளவில் வந்தார்கள்.
இது ஒரு குடும்ப நிகழ்ச்சி. ‘விடுதலை’ குடும்பத்தைச் சார்ந்த ஒரு விழா இன்றைக்கு நடைபெற்றுக் கொண் டிருக்கின்றது. அந்த விடுதலைக் குடும்பத்தில்தான் மணமகளின் தந்தை இராமு அவர்கள் பணியாற்றி, இந்தக் கொள்கையோடு தன் பிள்ளையைப் படிக்க வைத்தார்.
புரட்சிக்கவிஞர் விழாவில்,
நாட்டியம் ஆடியவர்!
இங்கே இருக்கின்ற மணமகள் சினேகா அவர்கள், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில், பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் நடைபெறும் புரட்சிக்கவிஞர் விழாவில், நாட்டிய நிகழ்ச்சியை நடத்திக் காட்டுவார்.
சிறிய பிள்ளையாக இருந்தவர். இன்றைக்குப் பெரிய பிள்ளையாகி, நன்றாகப் படித்து, லண்டனில் பணி யாற்றக்கூடிய நிலைக்கு வந்திருக்கின்றார்.
பெற்றோருக்கு எந்த சிரமுமின்றி, மணமக்கள் இரண்டு பேரும் ஒருவருக்கொருவரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். எல்லாவற்றையும் அவர்களே தேர்வு செய்தார்கள்.
இம்மணவிழா நடைபெறுகின்ற இடமும் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. கடற்கரையோரத்தில், மாலை நேரத்தில், மிக அழகான சூழலில், இனிமையாகஇருக்கிறது.
இம்மணவிழாவினைப் புகுத்தியவர் அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள்.
புரோகித மணவிழாவின்மீது எந்தவிதமான வெறுப்பும் நமக்குக் கிடையாது!
பெரியார் அவர்கள், மிகப்பெரிய சமூகப் புரட்சியாளர் ஆவார். புரோகித முறையில் இம்மணவிழா நடைபெற வில்லை. புரோகித மணவிழாவின்மீது எந்தவிதமான வெறுப்பும் நமக்குக் கிடையாது.
இம்மணவிழா அழைப்பிதழைப் பாருங்கள், இல்வாழ்க்கை இணையேற்பு விழா. மணமக்கள் இரண்டு பேருமே நண்பர்கள். ஒருவருக்கொருவர் நண்பர்களாகப் பழகக்கூடிய அளவிற்கு, உரிமையோடு இருக்கிறார்கள்.
ஒருவர் எஜமானன் – இன்னொருவர் அடிமை என்பது பழைய மண முறையில், புரோகித மண முறை யில் இருக்கலாம். ஆனால், சுயமரியாதைத் திருமண முறையில் அப்படிப்பட்ட நிலை இல்லை. ஒருவருக் கொருவர் புரிந்துகொண்டு, இம்முடிவினை எடுத்திருக் கிறார்கள்.
மணமகனின் பெற்றோரையும்,
அவரது குடும்பத்தினரையும் பாராட்டவேண்டும்!
மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால், பாராட்ட வேண்டிய விஷயம் என்னவென்றால், மணமகன் இராம் அவர்களுடைய பெற்றோரையும், அவரது குடும்பத் தினரையும் பாராட்டவேண்டும்.
ஏனென்றால், மணமகள் தந்தை இராமு அவர்களின் இல்ல மணவிழாவினை இம்முறையில் நடத்துவது ஒன்றும் பெரிய அதிசயமல்ல. இந்தக் கொள்கையில் அவர் மிகத் தெளிவானவர்.
வாழ்த்துகிறோம்,
நன்றி செலுத்துகின்றோம்!
ஆனால், அதேநேரத்தில், மணமகனாக இருக்கக் கூடிய ராம் அவர்கள், ஆந்திராவில் பிறந்து, ஒரு புதிய சூழ்நிலையில், சுயமரியாதைத் திருமண முறையில் தமிழ்நாட்டில் இம்மணவிழாவிற்கு ஏற்பாடு செய்கிறார் களே, அதற்கு ஒப்புக்கொள்ளவேண்டுமே என்றெல்லாம் நினைக்காமல், தாய் – தந்தை மற்றும் உறவினர்களோடு இம்மணவிழாவிற்கு வந்து நடத்திக் கொள்வதற்காக அவரை எத்தனை முறை வேண்டுமானாலும் நாம் பாராட்டலாம்; வாழ்த்துகிறோம், நன்றி செலுத்துகின்றோம்.
இந்தக் கொள்கையை ஏற்றதினால், மிக எளிமை யாகவும், அதேநேரத்தில், இம்மணவிழா மிகச் சிறப்பாக வும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
‘விடுதலை’ பத்திரிகை 90 ஆம் ஆண்டை நோக்கி நடைபோடக்கூடிய பத்திரிகை
எங்களுடைய ‘விடுதலை’ பத்திரிகை 90 ஆம் ஆண்டை நோக்கி நடைபோடக்கூடிய பத்திரிகையாகும். அதில், மணமகள் தந்தை இராமு அவர்கள் பணி யாற்றியவர். அப்படிப்பட்ட அவர், தன்னுடைய மகளை நன்றாகப் படிக்க வைத்து, லண்டனில் பணியாற்றக் கூடிய வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.
ஒரு காலத்தில், பெண்களை வெளியூருக்கோ, வெளிநாட்டிற்கோ தனியாக அனுப்பக்கூடாது என்று சொல்வார்கள். அந்த நிலை இன்றைக்கு இல்லை.
பெண்கள் எல்லாம் நன்றாகப் படித்து, வாழ்வில் முன்னேறி, சிறப்பான பணிகளில் சேர்ந்து, இன்றைக்கு எல்லாவற்றையும் முடிவு செய்யக்கூடிய நிலையில் இருக்கிறார்கள். பெற்றோர்கள் முடிவு செய்வதைவிட, அவர்கள் முடிவு செய்யக்கூடிய அளவிற்கு, நன்கு பக்குவமடைந்தவர்களாக இருக்கிறார்கள்.
சிறப்பான ஏற்பாடு!
இம்மணவிழாவினை இவ்வளவு தூரம் சென்னை நகரில் இருந்து இந்த இடத்தில் தள்ளி வைத்திருக் கிறார்களே என்றுகூட நான் கேட்டேன். பிள்ளைகளு டைய விருப்பம் என்று சொன்னார்கள். இங்கே வந்து பார்த்தபொழுதுதான் தெரிந்தது – கடற்கரையோரம், நல்ல காற்றோட்டம் – சிறப்பான ஏற்பாடாக இருக்கிறது.
ஆகவே, எல்லாவற்றிலும் மிகப்பெரிய அளவில் முன்னேற்றமாக இருக்கக்கூடிய மணமக்களே, உங் களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தந்தை பெரியாரின்
சுயமரியாதை வாழ்க்கை முறை!
நீங்கள் தன்னம்பிக்கை உடையவர்கள். எனவே, உங்கள் பெற்றோரிடம் அன்பு காட்டுங்கள்; அவர்களிடம் நெருக்கமாக இருங்கள். எளிமையான வாழ்க்கை வாழுங்கள். சிக்கனமாக வாழ்ந்து சேமித்து வைக்க வேண்டும்.
பெரியார் அவர்களுடைய சுயமரியாதை வாழ்க்கை முறை என்னவென்றால், இன்னொருவரை நம்பி, நாம் இருக்கக்கூடாது. தன்னம்பிக்கையோடுதான் இருக்க வேண்டும்.
தன்னம்பிக்கையோடும்,
தன்னிறைவோடும் வாழுங்கள்!
அந்த அளவிற்குத் தன்னம்பிக்கையோடும், தன்னிறைவோடும் வாழ்க்கையை நீங்கள் வாழ்ந்து, பிறருக்கு எடுத்துக்காட்டாகத் திகழவேண்டும்.
மணமக்கள் இப்பொழுது வாழ்க்கை இணையேற்பு விழா ஒப்பந்தத்தை நம் அனைவரின் முன்னிலையிலும் நடத்திக் கொள்வார்கள்.
வாழ்க மணமக்கள்!
வாழ்க பெரியார்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த் துரையாற்றினார்.