22.5.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* காங்கிரஸ் இல்லாத இந்தியா என பேசி வந்த பிரத மர் மோடி, தற்போது காங்கிரசிடம் ஆட்சியை கொடுத்து விடாதீர்கள் என்று பேசும் நிலை உருவாகியுள்ளது, என்கிறார் கட்டுரையாளர் சுனில் கடாடே.
* மோடியின் மத வெறுப்பு பேச்சுக்கு நாங்கள் பதிலளிக்க மாட்டோம்; மக்கள் பிரச்சினைகளை தான் பேசுவோம், மல்லிகார்ஜூனா கார்கே பதில்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* கேரள பல்கலைக்கழக செனட்டில் ஆளுநரின் பரிந்துரைகளை கேரள உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. மாநில அரசு பரிந்துரைத்ததில் நீதிமன்றம் தலையிட வில்லை.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன: டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை.
தி டெலிகிராப்:
* உத்தரபிரதேசத்தில் கிராமத்தில், ஆட்சி மாற்றம் வருமா என்ற ஏக்கம் மக்களிடையே அதிகரித்துள்ளது.
தி ஹிந்து:
* கிழக்கு உ.பி.யில், வெற்றிக்காக இந்திய கூட்டணி முழு வீச்சில் களமிறங்குகிறது.
– குடந்தை கருணா
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
Leave a comment