தாராசுரம் கழகக் குடும்ப விழா

Viduthalai
2 Min Read

அரசியல்


தாராசுரம்,செப்.4-
திரா விடர் கழகத்தின் காப் பாளர் தாராசுரம் வை. இளங்கோவன்- இணையர் பரமேஸ்வரி ஆகியோரின் 61ஆவது திருமண நாளில் (29.08.2023). கழகத்தின் பொறுப்பாளர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

வை.இளங்கோவன்,  தம் குடும்பத்தில், அவரது தந்தையார் காலம் (1936)முதல் அவருடைய பேரக் குழந்தைகள் காலம் (2020) வரை நூற்றுக்கும் மேற்பட்ட சுயமரியாதை திருமணங்களை செய்து வைத்த கொள்கை வீரர்.

கும்பகோணம் இயக்க செயல்பாடுகளுக்கு மிகப்பெரும் தோன்றாத் துணையாக இருப்பவர்.

இயக்கத் தோழர் களுக்கும், ஏழ்மையில் உள்ளோருக்கும் முகம் சுளிக்காமல் எந்த நேர மும் உதவி செய்பவராக வாழும் வள்ளல் அவர்.

தாராசுரத்தில் மறைந்த பெரியார் பெருந்தொண்டர் வை. கோவிந்தசாமி அவர்களு டைய நினைவாக அந்தப் பகுதியில் ஏழை எளிய மாணவர்களுக்காக ஒரு பள்ளியை துவக்கி இன்று ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி பெறக் காரணமாக விளங் கிய குடும்பத்தின் வாரிசு வை.இளங்கோவன் ஆவார்.

உண்மையான கருப்பு சட்டை தோழர் தாரா சுரம் வை. இளங்கோவனை திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பலமுறை சென்னை பெரியார் திட லிலும், கும்பகோணத்தில் நடைபெற்ற மாநாடுகளி லும், பொதுக் கூட்டங்க ளிலும் பாராட்டி, வாழ்த் தியிருக்கிறார்.

நூற்றுக்கும் மேற் பட்ட சுயமரியாதைத் திருமணங்களை செய்து சனாதன குருட்டு சமு தாயத்தில் பகுத்தறிவு வழிகாட்டியாக விடி வெள்ளியாக இருப்பவர் இளங்கோவன் என்பதை ஆசிரியர் தனது “வாழ் வியல் சிந்தனை” நூலில்  நினைவுபடுத்தி பதிவு செய்து இருக்கிறார்.

வை.இளங்கோவன் 20.11.2015 அன்று சென்னை பெரியார் திடலில் நடை பெற்ற சுயமரியாதை இயக்கம் 90, நீதிக்கட்சி நூற்றாண்டு தொடக்க விழாவில் தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்களால்  விருது வழங்கி பாராட் டப்பட்டார்.

தமிழ்நாடு அரசு மின் சாரத் துறையில் பணி யாற்றி ஓய்வு பெற்ற பின் தொடர்ந்து இயக்கப் பணிகளில் முழுமூச்சாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். குடந்தை யில் ஒன்றிய தலைவர், மாவட்டத் துணைத் தலைவர், மாவட்டத் தலைவர், பொதுக்குழு உறுப்பினர், காப்பாளர்- போன்ற பல்வேறு பொறுப்புகளில் இயக்கப் பணிகளை திறம்பட செய்து வருபவர்.

திராவிடர் கழகத்தின் படை வீரரான அவர் இயக்க சீருடையான கருப்புச் சட்டை தவிர வேறு எந்த விதமான வண்ணச் சட்டைகளும் அணியாதவர். அவரது கழகப்பணிகளை போற்றி பாராட்டும் வகையில் அவரது இல்லத்திற்கு சென்று  பயனாடை அணி வித்து தந்தை பெரியாரின் நூல்களை கழகத் தோழர் கள் வழங்கினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *