சென்னை, மே 22- சென்னை பெரியார் திடல் அன்னை மணியம்மையார் அரங்கில் 20.05.2024 திங்கள் கிழமை மாலை 6.30 மணியளவில் புதுமை இலக்கியத் தென்றல் ஒருங்கிணைத்த 990 ஆம் நிகழ்வாக சுயமரியாதை இயக்கம் 100 நடைபெற்றது. அயன்புரம் துரைராஜ் வரவேற்புரையாற்றினார்.
புதுமை இலக் கியத் தென்றலின் செயலாளர் வை.கலையரசன் தொடக்க வுரையில், தந்தை பெரியார் அவர் களின் ’குடிஅரசு’ இதழ் ஆரம்பிக்கப் பட்டதன் நோக்கம் குறித்து எடுத்துரைத்தார். தலைமை உரையாற்றிய புதுமை இலக்கியத் தென்றலின் தலை வர் பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் சுயமரியாதை இயக்கம் தீர்மானங்கள் வாயிலாக எழுப்பிய கேள்விகளையும், அதன் விளைவாக வந்த தீர்வுகளையும் விளக்கினார்.
கழக இளைஞரணி துணைச் செயலாளர் வழக்குரைஞர் சோ.சுரேஷ் சிறப்புரையில், தந்தை பெரியாரால் சுயமரியாதை இயக்கம் தோன்றுவதற்கு முன்பு இருந்த அவலநிலைகளையும், பார்ப்பனியத் தின் ஆதிக்கத்தையும் எடுத்துக்காட்டி, திராவிட இனத்தின் சமூக முன்னேற் றத்திற்கு நீதிக்கட்சியின் பங்களிப்பும், தந்தை பெரியாரின் தொண்டு குறித்தும், சுயமரியாதை இயக்கம் நடத்திய மாநா டுகள் மற்றும் தீர்மானங்கள் குறித்தும் அடுத்தடுத்த ஆண்டுகள் வாரியாக குறிப்பிட்டு பேசினார். கூட்டத்தின் தொடக்கமாக தரமணி நாகராசன் பண்டிதர் நேருவைப்பற்றி கவிதை வாசித்தார்.
ஜோதி இராமலிங்கம் – கவிதா ஆகி யோரின் 10 ஆம் ஆண்டு இணையேற்பு நாள் மகிழ்வாக இனிப்பு மற்றும் காரச் சுவை நொறுக்குத்தீனிகள் வழங்கப்பட் டது. கூட்டத்தில் கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த் தினி, மக ளிர் பாசறை மாநில செய லாளர் வழக்குரை ஞர் பா.மணியம்மை, கொடுங்கையூர் தங்கமணி, தங்க.தனலட்சுமி, தென் சென்னை மாவட்ட கழக துணைச் செயலாளர் அரும்பாக்கம் தாமோ தரன், தென் சென்னை மகளிரணி செயலாளர் மு.பவானி உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர். இறுதியாக இராவணன் மல்லிகா நன்றியுரையாற் றினார்.