பி.கார்த்திகேயன் – நா.கண்மணி இணையேற்பு விழா

1 Min Read

திராவிடர் கழகம்

சி.க.பிரிதிவிராஜ் (‘விடுதலை’ விளம்பரப் பிரிவு) – கற்பகம் இணையரின் மகன் பி.கார்த்திகேயன், குத்தாலம் ஒன்றிய கழகத் தலைவர் சா.முருகையன் – பார்வதி இணையரின் பெயர்த்தியும் – நா.நாராயணமூர்த்தி – உஷா இணையரின் மகளுமான நா.கண்மணி வாழ்க்கை இணையேற்பு விழாவினை திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் நடத்தி வைத்தார். விழாவிற்குத் தலைமை வகித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் இரா.முத்தரசன், மாநிலத் துணைச் செயலாளர் தோழர் நா.பெரியசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். திருவொற்றியூர் மாவட்ட கழகக் காப்பாளர் ஓவியர் பெரு.இளங்கோ, மாவட்ட தலைவர் வெ.மு.மோகன், துணைத் தலைவர் ந.இராசேந்திரன், எண்ணூர் கழகத் தலைவர் மு.மணி காளியப்பன், செயலாளர் பொ.இராமச்சந்திரன், இ.இந்திரா மற்றும் கழகத் தோழர்கள் மண விழாவிற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர். முதல் நாளில் நடைபெற்ற மணவிழா வரவேற்பு நிகழ்ச்சியில் திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதி – தி.மு.க. உறுப்பினர் கே.பி.சங்கர் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக் கூறினார். (19.11.2023, எண்ணூர்).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *