சமா.இளவரசன்
கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பதவி வகித்துவந்த சித்தரஞ்சன் தாஸ் என்பவர் 20.05.2024 அன்று ஓய்வு பெற்றார். அதற்காக மூத்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், பார் கவுன்சில் வழக்குரைஞர்களின் முன்னிலையில் அவருக்கு ஓய்வு பெறுபவருக்கான விடைபெறும் விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
அந்த விழாவில் கலந்துகொண்டு நீதிபதி சித்தரஞ்சன் தாஸ் உரையாற்றியதாவது :-
“இங்கே நான் ஓர் உண்மையை உங்களிடம் வெளிப்படுத்த வேண்டும். நான் ஓர் அமைப் புக்குக் கடமைப்பட்டுள்ளேன். சிறுவயது முதல் என் இளமைப் பருவம் வரை அந்த அமைப்பில் தான் இருந்தேன். எனக்கான தைரியம், எல்லோ ரையும் சமமாக பார்க்கும் குணம், தேசபக்தி, வேலையில் முழுமையான ஈடுபாடு ஆகியற்றை அந்த அமைப்பிடம் தான் கற்றுக்கொண்டேன்.
நான் ஆர்.எஸ்.எஸ்.சின் உறுப்பினராக இருந்தேன்; இருக்கிறேன். (I must admit here that I was and I am a member of the RSS)
ஆனால், நேரடியாக எனக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும் மத்தியில் சுமார் 37 ஆண்டுகள் இடைவெளி ஏற்பட்டுவிட்டது. நான் ஆர்.எஸ்.எஸ்-ஸில் இருந்தேன் என்பதற்காக எந்த சலு கைகளையும் பெற்றதில்லை. அப்படி சலுகை களை ஏற்றுக்கொள்வது அந்த அமைப்பின் கொள்கைக்கு எதிரானது. பணக்காரர், ஏழை, கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜ.க, காங்கிரஸ் என யாராக இருந்தாலும் அனை வரையும் நான் சமமாகத் தான் நடத்தினேன்.
குறிப்பிட்ட கட்சி, கொள்கைக்காக ஒருதலைப் பட்சமாக இருந்ததில்லை. ஏனென்றால் நீதிக்காக சட்டம் வளையலாம், சட்டத்துக்காக நீதி வளைந்து கொடுக்கக்கூடாது. இப்போதுகூட என்னால் முடியும் வேலைகளை செய்வதற்கு ஆர்.எஸ்.எஸ் என்னை அழைத்தால் அவர் களுக்காக உழைக்கச் சென்றுவிடுவேன். என் வாழ்வில் நான் எந்த குற்றத்தையும் செய்ததில்லை. எனக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் தொடர் பிருக்கிறது எனக் கூறுவதற்கு தைரியம் இருக் கிறது. அந்த அமைப்பில் இருப்பது ஒன்றும் தவறான விடயமல்ல”. இவ்வாறு நீதிபதி உரையாற்றினார்.
1986-ஆம் ஆண்டு வழக்குரைஞராக தன் பயணத்தை தொடங்கிய நீதிபதி சித்தரஞ்சன் தாசுக்கு 1999-ஆம் ஆண்டு ஒடிசாவின் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதியாகப் பணியாற்றத் தொடங்கினார். பிறகு ஒடிசா உயர் நீதிமன்றத்தின் பதிவாளராகப் பணியமர்த்தப்பட்டு, 2009-ஆம் ஆண்டு ஒடிசா உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக பதவியில் அமர்த்தப்பட்டார்.. அதைத் தொடர்ந்து, கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக 2022-ஆம் ஆண்டு இடம் மாற்றப் பட்டார். இந்த நிலையில், 14 ஆண்டுகள் நீதிபதியாக பணியாற்றிய, நீதிபதி சித்தரஞ்சன் தாஸ் 20.5.2024 அன்று பணி ஓய்வு பெற்றார்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் தொடர்பிருக் கிறது எனக் கூறுவதற்கு எனக்குத் தைரியம் இருக்கிறது என்று சொன்ன நீதிபதி, அதை ஓய்வு பெறும் வரைக்கும் மறைத்து வைத்திருந்து, ஓய்வு பெறும் நாள் அன்று வெளிப்படுத்துவது ஏன் என்ற கேள்வி, அவரது கூற்றுக்கும் செயலுக் குமான வேறுபாட்டை உணர்த்துகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னால் இதே கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் நீதிபதியும், அம் மாநிலத்தில் ஊடகங்களால் அதுவரை பெரிதும் தூக்கிக் கொண்டாடப்பட்டு வந்தவருமான அபிஜித் கங்கோபாத்யாயா, திடீரென நீதிபதி பதவியிலிருந்து விலகி, உடனடியாக பா.ஜ.க.வில் இணைந்து வேட்பாளரும் ஆகிவிட்டார்.
கடந்த 10 ஆண்டுகளில் ஆர்.எஸ்.எஸ்.சின் கரங்கள் எங்கேயெல்லாம் உள்ளே நுழைந்திருக் கின்றன என்பதைக் கவனித்து நாட்டை வழி நடத்தவேண்டியது மிகவும் அவசியமாகும். இவர்களெல்லாம் வழங்கிய தீர்ப்புகள் நடு நிலைமையானவை என்றும், அவை சார்புத் தன்மையற்றவை என்றும் அவர்களே நம்பச் சொல்கிறார்கள் என்றால், ஆர்.எஸ்.எஸ். தொடர்பு அம்பலப்பட்டவுடன், அந்த நம்பகத் தன்மை அடிபட்டுப் போய்விட்டது என்பதை அவர்களே உணர்ந்திருக்கிறார்கள் என்று தானே பொருள்.
வெளிப்படையாக ஆர்.எஸ்.எஸ். சார்புடைய அதிகாரிகள், நீதிபதிகள் எல்லாம் தங்களை ஒப்புக் கொள்வதற்கு சிலர் ஓய்வு பெறும் வரை காத்திருக்கிறார்கள்; சிலர் பதவியிலிருக்கும் போதே காட்டிக் கொள்கிறார்கள். சித்தரஞ்சன் தாசும், அபிஜித் கங்கோபாத்யாயாவும் முதல் வகைப்பட்டவர்கள். இரண்டாம் வகைப்பட்ட வர்களை நாம் சொல்லவும் வேண்டுமோ?