டில்லிஅய்.அய்.டி-யில் தாழ்த்தப்பட்ட சமூக மாணவர் தற்கொலை!

1 Min Read

புதுடில்லி, செப். 4- டில்லி அய்.அய்.டி-யில், பி.டெக் இறுதி ஆண்டு படித்து வந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர் அணில் குமார் (வயது 21), தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

டில்லி அய்அய்டி-யில் பி.டெக் கணிதம் மற்றும் கம்ப்யூட்டிங் படிப்பில் இறுதி ஆண்டு படித்து வந்தார் அணில் குமார் (21). இவர் சில பாடங்களில் தேர்ச்சி பெற முடியாததால், மேலும் ஆறு மாதங்கள் விடுதியில் தங்கிப் படிக்க விடுதி அதிகாரிகளிடம் அனுமதி கோரி யுள்ளார். அவரது கோரிக்கையை ஏற்று ஆறு மாதங்கள் விடுதியில் தங்க விடுதி நிர்வாகம் அனுமதி வழங்கியது. இந்த நிலையில், அணில் குமார் (வயது 21) தனது விடுதி அறையில் நேற்று  (2.9.2023) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த காவல்துறையினர், அணில் குமாரின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தற்கொலை செய்து கொண்ட மாணவர் அணில் குமார், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்று அம்பேத்கர் பூலே பெரியார் மாணவர் வட்டம் தெரிவித்துள்ளது.

டில்லிஅய்.அய்.டி வளாகத்தில், இது கடந்த இரண்டு மாதங்களில் நடந்த இரண்டாவது தற்கொலை நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *