போலி பில்­கள் மூலம் அதானி குழு­மம் ரூ.6,278 கோடி மோசடி!

Viduthalai
1 Min Read

உச்­ச­நீ­தி­மன்ற மூத்த வழக்குரைஞர் பிர­சாந்த் பூஷண் குற்­றச்­சாட்டு!

புது­டில்லி, செப். 4– அதானி குழு­மம் தங்­க­ளது நிறு­வ­னங்­க­ளுக்கு இயந்­தி­ரங்­கள் வாங்­கி­ய­தில் போலி பில்­கள் தயா­ரித்து 6 ஆயி­ரத்து 278 கோடி மோசடி செய்­துள்­ள­தாக குற்­றச்­சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்­பாக உச்­ச­நீ­தி­மன்ற வழக்குரைஞர் பிர­ஷாந்த் பூஷண் வெளி­யிட்­டுள்ள சமூக வலை­ த­ளப்­பதிவில், அதானி குழும முறை­கே­டு­கள் குறித்து விசா­ரணை நடத்த ஒன்­றிய வரு­வாய் புலனாய்வுத்துறை இயக்­கு­ந­ர­கம், செபி அமைப்­பிற்கு அனுப்­பிய கடி­தத்தை பகிர்ந்­துள்­ளார்.

அந்த கடி­தத்­தில், அதானி நிறு­வ­னம் மின்­சா­ரம் மற்­றும் கட்­டு­மான நிறு­ வ­னங்­க­ளுக்கு இயந்திரங்களை உண்­மை­யான விலையை விட கூடு­தல் விலைக்கு கொள்­மு­தல் செய் ததாக போலி பில் தயா­ரித்து மோசடிசெய்­தது சுட்­டிக்­காட் ­டப்பட்­டுள்­ளது. போலி பில்­கள் மூலம் 6 ஆயிரத்து 278 கோடி மோசடி செய்­துள்­ள­தா­க­வும் அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அய்க்­கிய அரபு அமீ­ரக நிறு­வ­னம் மூலம் இந்த இயந்­தி­ரங்­கள் வாங்­கப்­பட்­ட­தா­க­வும், முறை­கே­டாக பெறப்­பட்ட பணம் துபா­யில் இருந்துமொரி­சி­ய­சுக்கு அனுப்­பப்­பட்­ட­தா­க­வும், பின்­னர் அந்த பணம் இந்­திய பங்­குச்­சந்­தை­க­ளில் முத­லீடு செய்­யப்­பட்­டுள்­ள­தா­க­வும்குற்­றச்­சாட்டு எழுந்­துள்­ ளது.

இந்த முறை­கேடு புகார் குறித்து விசா­ரணை நடத்­து­மாறு செபி அமைப்­பிற்கு, ஒன்­றிய வரு­வாய் புல­னாய்­வுத்­துறை ஏற்­கெ­னவே கடி­தம் எழு­ தி­ய­தை­யும் பிர­ஷாந்த் பூஷண் தனது சமூக வலைத் தள பதி­வில் சுட்­டிக்­காட்­டியுள்­ளார்.

காங்­கி­ரஸ் குற்­றச்­சாட்டு!

அதானி முறை­கேடு விவ­கா­ரத்­தில் ராகுல்­காந்­தி­யின் கேள்­வி­க­ளுக்கு, பிர­த­மர் மோடி மவு­ன­மாக இருக்­கும் ஒவ்­வொரு கண­மும், பன்னாட்டு அரங்­கில் இந்­தி­யா­வின் நற்­பெ­யர் மேலும் கெடும் என்று காங்­கி­ரஸ் பொதுச்­செ­ய­லா­ளர் கே.சி. வேணு­கோ­பால் தெரி­வித்­து உள்­ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *