உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் குற்றச்சாட்டு!
புதுடில்லி, செப். 4– அதானி குழுமம் தங்களது நிறுவனங்களுக்கு இயந்திரங்கள் வாங்கியதில் போலி பில்கள் தயாரித்து 6 ஆயிரத்து 278 கோடி மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக உச்சநீதிமன்ற வழக்குரைஞர் பிரஷாந்த் பூஷண் வெளியிட்டுள்ள சமூக வலை தளப்பதிவில், அதானி குழும முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த ஒன்றிய வருவாய் புலனாய்வுத்துறை இயக்குநரகம், செபி அமைப்பிற்கு அனுப்பிய கடிதத்தை பகிர்ந்துள்ளார்.
அந்த கடிதத்தில், அதானி நிறுவனம் மின்சாரம் மற்றும் கட்டுமான நிறு வனங்களுக்கு இயந்திரங்களை உண்மையான விலையை விட கூடுதல் விலைக்கு கொள்முதல் செய் ததாக போலி பில் தயாரித்து மோசடிசெய்தது சுட்டிக்காட் டப்பட்டுள்ளது. போலி பில்கள் மூலம் 6 ஆயிரத்து 278 கோடி மோசடி செய்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அய்க்கிய அரபு அமீரக நிறுவனம் மூலம் இந்த இயந்திரங்கள் வாங்கப்பட்டதாகவும், முறைகேடாக பெறப்பட்ட பணம் துபாயில் இருந்துமொரிசியசுக்கு அனுப்பப்பட்டதாகவும், பின்னர் அந்த பணம் இந்திய பங்குச்சந்தைகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும்குற்றச்சாட்டு எழுந்துள் ளது.
இந்த முறைகேடு புகார் குறித்து விசாரணை நடத்துமாறு செபி அமைப்பிற்கு, ஒன்றிய வருவாய் புலனாய்வுத்துறை ஏற்கெனவே கடிதம் எழு தியதையும் பிரஷாந்த் பூஷண் தனது சமூக வலைத் தள பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
காங்கிரஸ் குற்றச்சாட்டு!
அதானி முறைகேடு விவகாரத்தில் ராகுல்காந்தியின் கேள்விகளுக்கு, பிரதமர் மோடி மவுனமாக இருக்கும் ஒவ்வொரு கணமும், பன்னாட்டு அரங்கில் இந்தியாவின் நற்பெயர் மேலும் கெடும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்து உள்ளார்.