வேலூர், மே 21– வேலூர் அருகே கத்தியைக் காட்டி மிரட்டி வழிப் பறியில் ஈடுபட்ட பாஜக இளை ஞரணி மாவட்டத் தலைவர் ரவுடி கிளி (எ) சதீஷ் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டா அடுத்த கந்தனேரி தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் இளைஞர் ஒருவர் அந்த வழியாக இருசக்கர வாகனம் மற்றும் நடந்து செல்வோர்களை மடக்கி கத்தியை காட்டி பணம் பறிப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அங்கு வெட்டுவாணம் அம்பேத்கர் நகரை சேர்ந்த விஜய் (37) என் பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி யவரை கையும் களவுமாக பிடித் துள்ளனர்.
விசாரணையில் அவர் பள்ளி கொண்டா கட்டுப்புடி தெருவை சேர்ந்த கிளி (எ) சதீஷ் (37) என்பது தெரியவந்தது.
இவர் வேலூர் மாவட்ட பாஜ இளைஞரணி மாவட்ட தலைவ ராக இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சதீஷ் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இவர் மீது கொலை, வழிப்பறி என பல்வேறு குற்ற வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் உள்ளன.
இதே போன்று பாஜக இளை ஞரணி நிர்வாகிகளான ராஜேஸ் மற்றும் நவீன் ஆகியோர் கட்சிக் கொடியுடனான காரில் நின்று கொண்டு வேலூர், காட்பாடி மற்றும்
வெள்ளக்கல் ஆகிய பகுதிகளில் போகும் தனியார் சுற்றுலா பேருந்து மற்றும் இரு சக்கர வாகனங்களை வழிமறித்து கத்தி யைக் காட்டி வழிப்பறி செய்துள் ளனர். இதனை ரோந்து சென்ற காவல்துறையினர் கண்டறிந்து நிகழ்விடத்திலேயே அவர்களைக் கைது செய்தனர்.