பழங்குடி மாணவர்கள் கல்லூரியில் சேர வாய்ப்பை அதிகரிக்க வேண்டும் முதலமைச்சருக்குக் கடிதம்

viduthalai
1 Min Read

சென்னை, மே 21- கூடுதலான எண்ணிக் கையில் பழங்குடி மாணவர்கள் பட்டப் படிப்பில் சேர்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண் டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அச்சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பெ.சண்முகம், முதலமைச்சருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
நடப்பாண்டு 12ஆ-ம் வகுப்பு தேர் வில் அரசு உண்டு – உறைவிட பள்ளிகளில் மட்டும் தேர்வெழுதிய 1,245 மாணவர் களில் 1,171 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.
8 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. இதர அரசுப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் தேர்ச்சி பெற்றவர்களையும் கணக்கில் கொண் டால் அதிகப்படியான பழங்குடி மாண வர்கள் உயர்கல்வி செல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

1200 இடங்கள்

ஆனால், தமிழ்நாடு அரசு கலைக் கல்லூரிகளில் பழங்குடி மாணவர் களுக்கு 1,200 இடங்கள் மட்டுமே உள்ளன.
அதிலும் பல பாடப்பிரிவுகளில் 50 இடங்களுக்கு மேல் இருந்தால் தான் 1 இடம் பழங்குடியினத்தவருக்கு கிடைக் கும். இதற்கு குறைவாக இடங்கள் உள்ள பாடப்பிரிவுகளில் பழங்குடி மாணவர்கள் சேரவே முடியாது.

எனவே, இடஒதுக்கீட்டின் அடிப் படையில் தமிழ்நாடு அளவில் பழங்குடியினத்தவருக்குரிய மொத்த இடங்களும் நிரப்பப்படுவது அவசியம்.
அதற்கு பழங்குடி மாணவர்களிடம் இருந்து அதிக விண்ணப்பங்கள் வரும் கல்லூரிகளுக்கு, போதுமான விண்ணப் பங்கள் வராத கல்லூரிகளுக்கான இடங்களையும் அளித்து கூடுதலான எண்ணிக்கையில் பழங்குடி மாண வர்கள் பட்டப் படிப்புகளில் சேர் வதற்கான வாய்ப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *