சந்தை நிலைமைகளின் ஏற்ற இறக்கம், உருவாகும் புதிய தொழில்நுட்பங்கள் ஆகியவற்றைக் கொண்ட நிதித் துறை யில், தொடர்ச்சியான கற்றல் என்பது நடைமுறைப் பயனை மட்டும் அளிப்ப தில்லை. நம்முடைய பொருத்தப் பாட்டை தக்க வைத்துக்கொண்டு, வெற்றியை அடைவதை நோக்கமாகக் கொண்ட எவருக்கும் இது முக்கியமான ஒன்றாகிறது.
தாய்மையில் கவனம் செலுத்து வதற்காக எடுக்கப்பட்ட இடைவேளைக் குப் பிறகு, நிதித் துறை பணிக்குத் திரும்பிய அனுபமாவின் கதை, இதற்கு ஒரு அழுத்தமான சான்றாகும். அவரது பயணம் மீண்டெழும்தன்மையின் முக்கியத்து வத்தை மட்டுமல்ல, கல்வியின் உருமாற்றும் சக்தியையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
தொழில்முறை வாழ்க்கையில்…
வங்கி மற்றும் காப்பீட்டுத் துறையில் சிறந்த பணி அனுபவத்தை அவர் கொண்டிருந்தார். எட்டு வருடங்கள் பணிபுரிந்த பின் வேலையிலிருந்து விலகினார். இந்த இடை வெளி முற்றிலும் வேலையிலிருந்து விலகுவதாக அல்லாமல், தொழில்முறை வாழ்க்கையில் ஒரு இடைவேளையாகவே இருந்தது. ஏனெனில், தனது மகள் பள்ளி செல்லும் வயதை அடைந்தவுடன் வேலைக்குத் திரும்ப அவர் ஏற்கெனவே திட்டமிட்டார்.
சான்றிதழ் படிப்பு
வேலைக்குத் திரும்ப முடிவுசெய்த அனுபமா, ஹீரோ வயர்ட் வழங்கும் நிதி பகுப்பாய்வு, மதிப்பீடு, இடர் மேலாண்மைக்கான சான்றிதழ் படிப்பைத் தேர்ந்தெடுத்தார். அவரது முந்தைய அனுபவத்திற்கும், வளர்ந்துவரும் நிதித் துறையில் தேவைப்படும் புதிய திறன்களுக்கும் இடையி லான இடைவெளியை நிரப்பும் நோக்கத்துடன் இந்த முடிவை எடுத்தார். அவர் தேர்ந்தெடுத்த படிப்பு ஒரு விரி வான பாடத்திட்டத்தை வழங்கியது, அது அவரது வேலை சார்ந்த விருப்பங்கள், தற்போதைய தொழில்துறைக்குத் தேவைப்பட்ட அம்சங்களுடன் நன்றாகப் பொருந்திப் போனது.
எப்படியிருந்தாலும், வேலை சார்ந்து மீண்டும் கவனம் செலுத்தத் தொடங்குவது அதற்கே உரிய சவால்களுடன் இருந்தது. “ஆரம்பத்தில் சோதனைகள் அல்லது நேர்காணல்களை கடப்பது எளிதானதாக இல்லை. ஆனால், தொடர் கற்றல் மற்றும் பயிற்சிக்கு என்னை நான் அர்ப்பணித்துக் கொண்டேன்,” என்று அனுபமா பகிர்ந்துகொண்டார்.
புதிய திறன்கள்
இந்த காலகட்டம் தீவிர படிப்பு மற்றும் சுய மதிப்பீடு களுடன் கடந்தது. ஏனெனில் தனது மேனாள் நிபுணத் துவத்தை மீண்டும் பெறுவது மட்டு மல்லாமல், புதிய- பொருத்தமான திறன்களையும் தனது அனுபவத்துடன் சேர்த்துக்கொள்ள அவர் முயன்றார்.
பாடத்திட்டமானது கல்விப் பயிற் சியைவிட மேம்பட்ட தாகவே இருந்தது; அது அவரது அறிவுக்குப் புத்துயிர் ஊட்டுவதாகவும், தொழில் முறை நம்பிக்கையை ஊக்கப் படுத்துவதாகவும் இருந்தது.
அனுபமா மீண்டும் வேலையைப் பெறுவதில் மட்டும் திருப்தி அடையவில்லை; அதை வழிநடத்தும் தலைமை நிலையை அடைவதை நோக்கமாகக் கொண்டார். லட்சியம், வாழ்க்கைப் பாதைக்கான தெளிவான பார்வை ஆகியவற்றை அவரது எதிர்காலத் திட்டங்கள் கொண்டிருந்தன. “சி.எஃப்.ஏ போன்ற மேலும் சில சான்றிதழ் படிப்புகளைத் தொடர்ந்து படிக்க நான் திட்டமிட்டுள்ளேன். ஏனென்றால், எனது துறையுடன் தொடர்பில் இருப்பதற்கும் சிறந்து விளங்கு வதற்கும் தொடர்ச்சியான தொழில்முறை சார்ந்த மேம்பாடு அவசியம் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் உற்சாக மாக கூறினார்.
விடாமுயற்சியே வெற்றி
அனுபமாவின் இந்த அனுபவம் வேலை செய்யும் தாய்மார்கள் ஓர் இடைவேளைக்குப் பிறகு தங்கள் வேலைக்குத் திரும்புவதற்கான வாய்ப்புடன் பெரிதும் தொடர்புபடுத்திப் பார்த்துக்கொள்ளக்கூடியது. இந்தச் சவாலை எப்படிச் சமாளிப்பது என்பது குறித்த ஊக்க மூட்டும் அடையாளமாக அவர் இருக்கிறார். “தங்கள் வேலையில் இடைவேளை எடுக்கும் தாய்மார்கள், உங்கள் குழந்தை களுக்கு ஒரு வலுவான முன்மாதிரியாக இருப்பதன் முக்கியத் துவத்தை நினைவில் கொள்ளுங்கள். நாம் ஏதாவது வகை யில் தோல்வி அடைந்தால், அதிலிருந்து நகர்ந்து போகாமல் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். நம் திறமைகளை கூர்மைப் படுத்த வேண்டும், இறுதியில் நாம் வெற்றி பெறுவோம்” என்று அவர் அறிவுறுத்துகிறார்.