“கரூர் அருகே நேர்த்திக் கடனை செலுத்த எச்சில் இலைகள் மீது உருளும் விநோதத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கரூர் அருகேயுள்ள நெரூரில் ஸ்ரீசதாசிவ பிரம் மேந்திரான் ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பிரம்மேந்திராளுக்கு உற்சவ விழா நடைபெறுவது வழக்கம். 92-ஆவது ஆண்டாக ஞாயிற்றுக்கிழமை உற்சவ விழா நடைபெற்றது. இதையொட்டி ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திராளுக்கு சிறப்பு அபிஷேகம், இலட்சார்ச்சனை செய்யப்பட்டது. அவரது திருவு ருவப் படம் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு, நெரூர் அக்ரஹாரத்தில் உள்ள பஜனை மடத்தில் வைத்து பூஜிக்கப்பட்டது.
இதையடுத்து அக்ரஹார வீதியில் பிரம்மாண்ட அன்னதானம் நடைபெற்றது. அதில் ஒரே நேரத்தில் சுமார் 500க்கும் அதிகமானோர் சாப்பிட்டனர்.
பின்னர் அனைவரும் எழுந்த பிறகு, மூடப்படாத எச்சில் இலைமீது சுமார் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒரே நேரத்தில் உருண்டனர். நெரூரில் ஜீவ சமாதியடைந்த ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திராள் அன்னதானத்தின்போது ஒரு இலையில் அமர்ந்து உண்பார். அது எந்த இலை எனத் தெரியாததால். அனைத்து இலைகளின்மீதும் பக்தர்கள் உருண்டு நேர்த்திக் கடன் செலுத்துவது அய்தீகம் என்றனர் பக்தர்கள்.
இவ்வாறு செய்வதன் மூலம் நினைத்த காரியங்கள் கைகூடும். வேண்டுதல்கள் நிறைவேறியதும், இலையின்மீது உருளு வோரும் உண்டு. கோயிலுக்கு வருபவர்கள் யாராயினும் சாப்பிட மாட்டேன் எனக் கூறினால், அவரைக் கட்டாயப்படுத்தியாவது சாப்பிட வைப்பது வழக்கம். காரணம், அவரது உருவில்கூட பிரம்மேந்திராள் வந்திருக்கலாம் எனக் கருதியே. இதற்காக சென்னை, பெங்களூர் உள்ளிட்ட வெளியூர்களிலிருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர்.”
(‘தினமணி’ 8.5.2006).
இன்றைக்குப் பதினெட்டு ஆண்டுகளுக்கு முன் ‘தினமணி’ வெளியிட்ட செய்தி இது. கோயிலுக்கு வருவோரில் யாரேனும் சாப்பிட மறுத்தால், அவர் களைக் கட்டாயப்படுத்தி சாப்பிட செய்வார்களாம். காரணம், அப்படி சாப்பிட மறுப்பவர்கள் உருவத்தில் கூட பிரமேந்திராள் வந்திருக்கலாம் எனக் கருதுவார்களாம்.
பிரமேந்திரர் என்றால் ஒரு தவசி; தீர்த்த யாத்திரை சென்று புண்ணிய சுத்தமடைந்து முக்தியடைந்தவர் என்று அபிதான சிந்தாமணி கூறுகிறது.
இல்லாத ஒன்றிற்காக அறிவுக்குப் பொருத்தமற்ற புராண அண்டப் புளுகுகளைப் பக்தி என்ற போர்வையில் மக்களின் புத்தியில் புகுத்திய கொடூரத்தை கேவலத்தை இந்த 2024லிலும் செய்து கொண்டிருப்பவர்களை மன்னிக்கவே முடியாது – முடியவே முடியாது.
“பக்தி வந்தால் புத்தி போகும்” என்றார் தந்தை பெரியார். “ஒரு குட்டிக் கடவுள் இருக்கும் வரை நாம் சூத்திரர்கள்தான்” (‘விடுதலை’ 3.2.1956 பக்கம் 4) என்று தந்தை பெரியார் சொன்னது நிரந்தரக் கல்வெட்டே!