சென்னை, மே 21- பாலி டெக்னிக் கல்லூரிகளில் முதல் ஆண்டை தொடர்ந்து 2ஆ-ம், 3ஆ-ம் ஆண்டு பாடத்திட்டமும் விரைவில் மாற்றப்படுகிறது. இதற்கான வரைவு பாடத் திட்டம் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 34 அரசு உதவி பெறும் பாலிடெக் னிக்குகள், 406 தனியார் சுயநிதி பாலிடெக்னிக்குகள் என மொத் தம் 491 பாலிடெக்னிக் கல்லூரி கள் இயங்கி வருகின்றன.
இக்கல்லூரிகளில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான 3 ஆண்டு கால டிப்ளமா படிப்புகள் வழங்கப் படுகின்றன. இந்த டிப்ளமா படிப்புகளில், 10ஆ-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சேரலாம். அதே நேரத்தில், பிளஸ் 2 முடித்திருந்தால் ‘லேட்ரல் என்ட்ரி’ முறையில் நேரடியாக 2ஆம் ஆண்டு சேர்ந்துவிடலாம்.
பொறியியலில் டிப்ளமா படிக்கும் மாணவர்களின் வேலை வாய்ப்புத் திறனையும், தொழில் முனைவுத் திறனையும் மேம் படுத்தும் வகையில் பாடத் திட்டம் மாற்றியமைக்கப்படும் என உயர்கல்வித்துறை கடந்த ஆண்டு அறிவித்திருந்தது.
அதன்படி, 2023-2024ஆம் கல்வி ஆண்டில் முதல் ஆண்டு மாணவர்களுக்கு புதிய பாடத் திட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டது. இந்நிலையில், தற் போது 2ஆம் ஆண்டு மற்றும் 3ஆ-ம் ஆண்டு மாணவர்களுக்கும் புதிய பாடத்திட்டம் அமல்படுத் தப்பட உள்ளது.
இதைத் தொடர்ந்து, அந்த இரு ஆண்டு களுக்கான வரைவு பாடத் திட்டத்தை தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் தனது இணைய தளத்தில் (www.dte.tn.gov.in) வெளியிட்டுள்ளது.
சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட் ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் மற் றும் கம்யூனிகேஷன், கணினி அறிவியல் (கம்ப்யூட்டர் இன்ஜினிய ரிங்) ஆகிய பாடப்பிரிவுகளுக் கான வரைவு பாடத்திட்டம் தொடர்பான கருத்துகள் மற் றும் ஆலோசனைகளை அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகள் மே மாதம் 24ஆம் தேதிக்குள் இணையவழியில் தெரிவிக்குமாறு மாநில தொழில் நுட்பக் கல்வி ஆணை யர் கொ.வீரராகவராவ் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அக்கல்லூ ரிகளின் முதல்வர்களுக்கு அவர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.