சென்னை, மே 21- காவிரி தீர்ப் பினை மீறும் விதமாகக் கேர ளாவோ, கருநாடக அரசோ செயல்பட முயற்சித்தால் தமிழ் நாட்டின் காவிரி உரிமையைச் சட்டரீதியாக அரசு நிலைநாட்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்துள்ளார்.
தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கேரள அரசு சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதன் மூலம் அமராவதி அணைக்கு வரும் நீரைத் தடுக்கும் முயற்சி பற்றி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித் துள்ளார்.
“கள்ள மவுனம்” எதிர்க்கட்சித் தலைவருக்குக் கைவந்த கலை என் பதைக் காவிரி பிரச்சினையில் மட்டுமல்ல – பல்வேறு அரசியல் பிரச்சினைகள், தேர்தல் கூட்டணி யிலும் தமிழ்நாட்டு மக்கள் பார்த் திருக்கிறார்கள்.
அந்த வாசகத்திற்கு மறு உருவம் பழனிசாமி தானே தவிர வேறு யாருமல்ல. காவிரி இறுதித் தீர்ப் பில் தமிழ்நாட்டிற்குக் கிடைத்த நீர் உரிமையில் 14.75 டி.எம்.சி. நீரைக் கள்ள மவுனம் சாதித்துத் தாரை வார்த்தது இதே பழனிசாமி தான் என்பதை இந்த நேரத்தில் அவருக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
தமிழ்நாடு அரசைப் பொறுத்த வரை காவிரி நடுவர் மன்றம் 05.02.2007 அன்று அளித்த தீர்ப்பு, உச்சநீதிமன்றம் 16.05.2018 அன்று வழங்கிய இறுதித் தீர்ப்பு ஆகியவற் றுக்கு மாறாக, கருநாடக மற்றும் கேரள அரசுகள் நடந்துகொள்ள முயற்சிக்கும் போதெல்லாம் அதை அரசியல் ரீதியாக, ஒன்றிய அரசு வாயிலாக, காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டங்கள் வாயி லாகக் கடுமையாக எதிர்த்து வரு கிறது என்பது உண்மை. அமராவதி ஆற்றின் கிளை நதியான தேனாறு “வட்டவடா” எனக் கேரளாவில் அழைக்கப் படுகிறது.
இதைப் பொறுத்தவரை சென்ற 04.04.2024 அன்று நடைபெற்ற 29ஆ-வது காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்திலேயே “காவிரி வடிநிலத்தில் கேரள மற்றும் கரு நாடக அரசுகள் மேற்கொள்ளும் சிறுபாசனம் பற்றிய விவரங்களைச் சேகரிக்க வேண்டும், கண்காணிக்க வேண்டும்” எனத் தமிழ்நாட்டின் உறுப்பினர் மற்றும் நீர்வளத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலர் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தி இருக்கிறார்.
இதை இனி வரும் கூட்டங் களிலும் தொடர்ந்து வலியுறுத் துவார். ஆகவே, காவிரி தீர்ப்பினை மீறும் விதமாகக் கேரளாவோ, கருநாடக அரசோ செயல்பட முயற்சித்தால் அதை உறுதியுடன் எதிர்த்து – தமிழ்நாட்டின் காவிரி உரிமையைச் சட்டரீ தியாக மட்டு மல்ல அனைத்து விதத்திலும் தமிழ்நாடு அரசு நிலைநாட்டும் என்பதைத் தெரிவித்துக் கொள் கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.