உள்துறை அமைச்சரின் பேச்சா இது? “அணுகுண்டுகளுக்கும் நாங்கள் அஞ்ச மாட்டோம்” என்கிறார் அமித்ஷா

2 Min Read

லக்னோ, மே 20- காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான மணிசங்கர் அய்யர் சில மாதங்களுக்கு முன்பு அளித்த பேட்டி ஒன்றில், ‘பாகிஸ்தான் இறையாண்மை கொண்ட நாடு. அந்த நாட்டை இந்தியா மதிக்க வேண்டும். அவர்களிடம் அணு குண்டு இருக்கிறது. முட்டாள் ஒருவர் அங்கு ஆட்சிக்கு வந்து, இந்தியாவுக்கு ஏதிராக அதை பயன்படுத்தினால் நாமும் பாதிக்கப்படு வோம்’ என கூறியிருந்தார்.
இந்த பழைய காட்சிப் பதிவு தற்போது வெளியாகி தேர்தல் பிரச்சார களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் மணிசங்கரின் கருத்தை ஏற்க வில்லை என காங்கிரஸ் தலைமை அறிவித்தது.
எனினும் மணிசங்கர் அய்யரின் இந்த கருத்தை பா.ஜனதாவினர் தீவிர மாக எடுத்து தேர்தல் பிரச்சாரங்களில் காங்கிரசை குறை கூறி வருகின்றனர்.

அந்தவகையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் இந்த கருத்தை சுட்டிக்காட்டி காங்கிரசை குற்றம் சாட்டினார். இது தொடர்பாக உத்தரப்பிரதேசத்தின் லலித்பூரில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், “உத்தரப்பிரதேசத்தில் நாட்டுத் துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்டு வந்த ஒரு காலம் இருந்தது. ஆனால் பிரதமர் மோடி இங்குள்ள பண்டல்கண்ட் பிராந்தியத்தில் ராணுவ உற்பத்தி தளம் ஒன்றை நிறுவி உள்ளார். தற்போது பீரங்கி குண்டுகளை தயாரிக்கும் இடமாக உத்தரப்பிரதேசம் மாறி இருக்கிறது.

பாகிஸ்தான் ஏதாவது தவறு செய் தால், பண்டல்கண்டில் தயாரிக்கப்படும் பீரங்கி குண்டுகளை கொண்டு அந்த நாட்டை அழித்து விடுவோம். பாகிஸ் தானிடம் அணுகுண்டு இருப்பதால் அந்த நாட்டை மதிக்க வேண்டும் எனவும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை கேட்கக்கூடாது என்றும் மணிசங்கர் அய்யர் கூறியிருக்கிறார். ஆனால் இது நரேந்திர மோடி அரசு. அணுகுண்டுகளுக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானது. அப் படியே இருக்கும். நாங்கள் அதை எடுப் போம்.
இந்த நிலம் முகலாயர்கள், ஆங்கி லேயர்களுக்கு எதிராக போராடிய பகுதி. தற்போது பண்டல்கண்ட் கூட உள்நாட்டில் இருக்கும் ஆங்கிலேயர் களுக்கு எதிராக போராட வேண்டியிருக்கிறது” என்று அமித்ஷா கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *