திராவிடப் பேரொளி பண்டிதர் அயோத்திதாசர் அவர்களின் பிறந்தநாள்

0 Min Read

சென்னை, கிண்டி, காந்தி மண்டபம், பண்டிதர் அயோத்திதாசர் மணிமண்டபத்தில் இன்று (20.05.2024) தமிழ்நாடு அரசின் சார்பில் திராவிடப் பேரொளி பண்டிதர் அயோத்திதாசர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னாரின் சிலைக்கு அருகில் மாலை அணிவித்து, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த படத்திற்கு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் முனைவர் இல.சுப்பிரமணியன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் மரு.இரா.வைத்திநாதன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். உடன் அரசு அலுவலர்கள் உள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *