திருவள்ளூர் மாவட்டத்தில் ‘விடுதலை’ சந்தா திரட்டும்பணி தீவிரம்

1 Min Read

திருவள்ளூர், மே 20- திருவள்ளூர் மாவட்டததில் ‘விடுதலை’ சந்தா திரட்டும்பணியில் கழகப் பொறுப் பாளர்கள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டதில் கடந்த 19-5-2024 அன்று வீடு தோறும் விடுதலை நாளிதழை அனைவரிடமும் கொண்டு போய் சேர்க்கும் வகையில் திருவள்ளூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் மா.மணியின் வழிகாட்டுதலின்படி மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் ந.அறிவுச்செல்வன், மாவட்ட துணைச் செயலாளர் இரா.ஸ்டாலின் ஆகியோர் மாவட்ட முழு மையும் சென்று ‘விடுதலை’ நாளிதழுக்குச் சந்தா சேர்க்கும் பணியை செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் சென்னை துறைமுகத்தில் பணி செய்யும் வெங்கடேசன், கிராம கமிட்டித் தலைவர் சத்திய முல்லை, மக்கள் நீதி மய்யத்தின் மாவட்டச் செயலாளர் தணிகைவேல் அவர்களும் திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகனா ‘விடுதலை’க்கு ஆண்டு சந்தா வழங்கி ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் கரத்தினையும், தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளையும் என்றும் உயர்த்திப் பிடிக்க நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்று ஆதரவு தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *