பாட்னா, மே 20- காங்கிரசு ஆளும் மாநிலங் களில் மத அடிப்படையில் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்கவில்லை என பிரதமர் மோடியின் குற்றச்சாட் டுக்கு காங்கிரஸ் பதிலளித்துள்ளது.
பிரதமர் மோடி குற்றச்சாட்டு
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் இதர பிற் படுத்தப்பட்டோருக்கான இடஒதுக் கீட்டை அவர்களிடம் இருந்து பறித்து, மத அடிப்படையில் முஸ்லிம்களுக்கு வழங்கி வருவதாக அக்கட்சி மீது பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதா தலைவர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் சிறுபான் மையின ருக்கு இடஒதுக்கீடு வழங்குவது உண் மைதான் என்றும், ஆனால், அது மத அடிப்படையில் இல்லை என்றும் காங் கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து பாட்னாவில் பத்திரி கையாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய் ராம் ரமேஷ் கூறியதாவது:-
மத அடிப்படையில் இல்லை
கருநாடகா உள்பட காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் மத அடிப்படை யில் எந்த ஒதுக்கீடும் வழங்கப்படவில்லை. சமூக மற்றும் பொருளாதார பின்தங்கிய நிலையின் அடிப்படையில்தான் சிறு பான்மை சமூகங்களின் குறிப்பிட்ட பிரி வினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது.
மதத்தின் அடிப்படையில் இடஒதுக் கீடு மற்றும் குடியுரிமை வழங்க அனு மதிக்காத அரசமைப்புக்கு நாங்கள் கீழ்ப்படிகிறோம். மத அடிப்படையில் குடியுரிமை வழங்கும் சிஏஏ மூலம் அரசமைப்பை மீறியது பா.ஜனதாதான். உண்மையான பிரச்சினைகளில் இருந்து பொதுமக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகமோடி ஒன்றன் பின் ஒன்றாக பொய்யான அறிக்கை களை வெளியிட்டு வருகிறார்.
மோடிக்கு காங்கிரஸ் சவால்
அவரது காலடியில் இருந்து நிலம் நழுவிக்கொண்டிருக்கிறது. பிரதமர் பதவியில் இருந்து வெளியேறப்போவதை உணர்ந்து விரக்தியில் உள்ளார். எங் களின் தேர்தல் அறிக்கை குறித்து பொய்யான தகவல்களை கூறிவரும் மோடிக்கு நாங்கள் ஒரு சவால் விடுக்கிறோம்.
ஜாதி வாரிக் கணக்கெடுப்பு, விவசாயிகளின் கடன் தள்ளுபடி மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப் பூர்வ உத்தரவாதம் போன்ற காங்கிரஸ் வாக்குறுதிகள் தொடர்பாக பா.ஜன தாவின் நிலைப்பாடு என்ன என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும்.
பா.ஜனதா அதன் தொடக்கத்தி லிருந்தே, சட்டமேதை அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அரசமைப்புக்கு எதி ரானது. அதே சமயம் காங்கிரஸ் எப் போதும் சமூக நீதிக்கு உறுதி பூண்டு உள்ளது.
50 சதவீத வரம்பை நீக்க….
அதற்கு சிறந்த உதாரணம், பி.வி. நரசிம்மராவ் பிரதமராகவும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சீதாராம் கேசரி சமூக நலத்துறை அமைச்சராகவும் இருந்தபோது தமிழ்நாட்டில் தாழ்த் தப்பட்ட பிரிவினருக்கு 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது ஆகும்.
அரசமைப்புத் திருத்தத்தின் மூலம் இடஒ துக்கீடுமீதான 50 சதவீத வரம்பை நீக்குவதற்கும் காங்கிரஸ் உறுதியாக உள்ளது.அத்தகைய நடவடிக்கைக்கு அவர் ஆதரவாக உள்ளாரா, இல் லையா என்பதை பிரதமர் மோடி தெளிவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.
குறிப்பு: மத அடிப்படையில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வில்லை. ஓபிசி என்ற அடிப்படையில் தான் வழங்கப்படுகிறது. குஜராத்திலும் இப்படித்தானே வழங்கப்படுகிறது மோடி இதற்கு பதில் சொல்வாரா?