மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து பேசாமல், பிரதமர் பிரிவினை அரசியல் செய்வது, நாட்டுக்கு நல்லத்தல்ல என்று ‘தி இந்து’ ஆங்கில நாளேடு தெரிவித்துள்ளது.
‘தி இந்து’ ஆங்கில நாளேடு (18.5.2024) வெளி யிட்டுள்ள தலையங்கத்தில், 543 மக்களவை தொகுதி களில் 379 தொகுதிகளுக்கு 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், எஞ்சிய 3 கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் உச்சக்கட்டத்தை எட்டி யுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்குகளை அறுவடை செய்ய ஆளும் கட்சியும்,எதிர்க்கட்சிகளும் ஒருவர் மீது ஒருவர் மாறி, மாறி குற்றச்சாட்டுக் களை முன்வைத்து வரும் சூழலில், பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கள் பெரும் பேசுப்பொருளாக இருந்து வருகிறது என கூறப்பட் டுள்ளது.
எதிர்க்கட்சிகள் மீது அபாண்டமான பொய் குற்றச் சாட்டுக்களை மோடி சுமத்தி வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருவதாக குறிப்பிட்டுள்ளது. உத்தரப்பிரதேச மக்களையும், வடமாநிலங்களையும் தென்மாநில அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்வ தாகவும், குறைத்து பேசுவதாகவும் தேர்தல் பிரச் சாரத்தில் பிரதமர் அப்பட்டமான பொய்யை கூறி யுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்துவிட்டு, எந்த வொரு சாதனையும் செய்யாததால், அதுகுறித்து பேச முடியாமல், எதிர்க்கட்சியினர் மீது தேவையற்ற குற்றச் சாட்டுக்களை சுமத்துவதும், ஜாதி, மதம் குறித்து பேசு வதும், இந்து – முஸ்லிம் மக்களிடையேயான உறவில் பிளவை ஏற்படுத்தும் வகையில் பேசுவதும் என தனது வெறுப்புப் பேச்சுக்களை பிரதமர் மோடி உமிழ்ந்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பின்மையாலும், பணவீக்கத்தாலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் அடிப்படை பிரச்சினை கள் குறித்து பேசாமல், பிரதமர் பிரிவினை அரசியல் செய்வது நாட்டுக்கு நல்லதல்ல என்று ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் தெரிவித்துள்ளது.
வட மாநிலங்கள் உட்பட அனைத்து மாநில மக்களையும் தென்மாநிலங்கள் நேசிப்பதாகவும், தங்கள் மாநிலத்துக்கு வருகை தந்து பணிபுரியும் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும், ஏற்பாடுகளையும், பாதுகாப்பையும் உறுதிசெய்வதா கவும் ‘தி இந்து’ தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வடஇந்தியாவில் வேலைவாய்ப்பு இன்றி தென்னிந் தியாவுக்கு புலம்பெயரும் மக்களின் எண்ணிக்கை அதிகம் இருக்கும் நிலையில், வடக்கையும், தெற்கை யும் பிரித்துப்பேசும் விஷமச் செயலை பிரதமர் செய் யக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள் ளது.
தமிழ்நாட்டில் பீகாரைசேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக யூடியூபர் மணிஷ் காஷ்யப் என்ப வர் காட்சிப்பதிவு வெளியிட்டுவதந்தி பரப்பியபோது, அந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்து, அது ஒரு பொய் பிரசாரம் என்பதை உறுதி செய்து அவரை தமிழ்நாடு அரசு கைது செய்தது.
மணிஷ் காஷ்யப் பரப்பியதகவல்பொய் என்ற போதிலும், பீகார் உட்பட வடமாநில தொழிலாளர்கள் அனைவருக்கும் பாதுகாப்பை ஏற்படுத்தி கொடுத்தது தமிழ்நாடு அரசு என்று ‘தி இந்து’ ஆங்கில நாளேடு புகழாரம் சூட்டியுள்ளது.
அதேநேரத்தில் வதந்தி பரப்பிய நபரை தங்களது கட்சியில் பா.ஜ.க., இணைத்துகொண்டதாக விமர்சிக் கப் பட்டுள்ளது.
– நன்றி: முரசொலி, 20.5.2024