புதுச்சேரி மாநிலம் காரைக்காலை சார்ந்த முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் காரை பெரியார் முரசு (எ) ஆறுமுகம் 93 வயதில் முதுமையின் காரணமாக மறை வுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இந்திய இராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்று தொடர்ந்து இயக்கப் பணிகளிலும், மந்திரமா? தந்திரமா? எனும் அறிவியல் விளக்க நிகழ்ச்சிகளை தமிழ்நாடு, புது வையில் பட்டிதொட்டிகளில் எல்லாம் நடத்தி மக்களின் நன்மதிப்பை பெற்றவர். பழகுவதற்கு மிகவும் இனிமையான வர். 4.9.2023இல் மறைந்த அவரின் இறுதி நிகழ்வு, 6.9.2023 புதன் காலை 10 மணியளவில் காரைக்காலில் அவரது மகன் இல்லத்தில் நடைபெற உள்ளது. பெரியார் முரசுவின் இழப்பு புதுச்சேரி திராவிடர் கழகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். செய்தி அறிந்த புதுச்சேரி மாநில திராவிடர் கழக தலைவர் சிவ.வீரமணி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததோடு, நாளை இறுதி நிகழ்வில் புதுவை கழக தோழர்களுடன் கலந்து கொண்டு இறுதி மரியாதை செய்ய உள்ளார். ஆறுமுகம் என்கிற இயற் பெயரை கவிஞர் கலி.பூங்குன்றன்தான் பெரியார் முரசு என மாற்றியதாக பெருமையுடன் கழகத் தோழர்களிடம் சொல்லிக் கொள்வார்.
பெரியார் முரசு மறைவு
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books